நல்ல கதை கிடைத்தால் 80 வயதானாலும் நடிப்பேன் - எமி ஜாக்சன் பொளேர்!

நல்ல கதை கிடைத்தால் 80 வயதானாலும் நடிப்பேன் - எமி ஜாக்சன் பொளேர்!

Update: 2020-07-22 13:06 GMT

வெளிநாட்டில் இருந்து நடிக்க வந்தவர் எமி ஜாக்சன். தென்னிந்திய படங்களின் மூலம் திரையுலகில் பிரபலமானவர். ஆர்யா நடித்த மதராசபட்டினம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தங்க மகன், ஐ, எந்திரன் 2 ஆகிய படங்களிலும் சில பாலிவுட் படங்களிலும் நடித்தார்.

அதன் பின்னர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜுடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு இப்போது ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் சினிமாவில் தொடர்ந்து நடிப்பது குறித்து அவர் பேசியுள்ளார்.

அதில் "இந்தியா என்னை ஒரு நடிகையாக உருவாக்கியது. நான் என் சினிமா வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்கள்தான் என் நிஜ வாழ்க்கையிலும் என்னை உயர்த்தின. குடும்பச்சூழல் காரணமாக என்னால் நடிக்க முடியவில்லை என் குழந்தை கொஞ்சம் பெரிதாக வரையிலும் நான் இப்போது நடிப்பதாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

விரைவில் மீண்டும் நடிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். நல்ல கதைகளுக்காக காத்திருக்கிறேன், 80 வயதானாலும் நான் தொடர்ந்து நடிப்பேன்." எனக் கூறியுள்ளார்.

Similar News