முன்னாள் குடியரசு தலைவர் Dr. அப்துல்கலாம் அவர்களின் கனவை நிறைவேற்ற அமல்படுத்தப்பட்ட மத்திய அரசின் திட்டம்!

முன்னாள் குடியரசு தலைவர் Dr. அப்துல்கலாம் அவர்களின் கனவை நிறைவேற்ற அமல்படுத்தப்பட்ட மத்திய அரசின் திட்டம்!

Update: 2020-02-22 12:22 GMT

2001 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, கிராமப்புறங்களில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை சுமார் 74.2 கோடி(72.25%). அம்மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றம் பெறவேண்டும் என்பதே 2002-2007-ல் இந்தியாவின் 11-வது குடியரசு தலைவராக இருந்த Dr.A.P.J.அப்துல்கலாம் அவர்களின் கனவாக இருந்தது. அதற்காக அவர் PURA(Provision of Urban amenities in Rural Areas) என்ற ஓர் திட்டத்தை பற்றி, தனது 2003 ஆம் ஆண்டின் குடியரசு தின உரையின்போது முன்மொழிந்தார். PURA பற்றிய அவரது உரையின் தமிழாக்கம்: "நான் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளை கண்ட வரையில், அங்கு இருக்கும் இணைப்புகளின் அளவு (Connectivity) போதுமானதாக இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது. இணைப்புகள் என்று நான் இங்கு குறிப்பிடுவதில் 4 அம்சங்கள் உள்ளன. அவை:

1. கிராமப்புறங்களில் சாலைகள் அமைப்பதன் மூலம் கிராமப்புற பகுதிகளை நாட்டின் மற்ற பகுதிகளோடு இணைத்தல் (Physical connectivity).

2. நம்பகத்தன்மை கொண்ட தகவல்தொடர்பு சேவைகளை ஏற்படுத்தி மின்னணு முறையில் இணைத்தல் (Electronic connectivity).

3. சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி கூடங்களை ஏற்படுத்தி அறிவுசார் இணைப்பை உருவாக்குதல் (Knowledge connectivity).

4. இவை மூன்றையும் ஒருங்கிணைத்து செயல்படுத்திவதன் மூலம் பொருளாதார இணைப்பை உருவாக்குதல் (Economic connectivity)".

அன்றைய பாரத பிரதமர் திரு.அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள், Dr.அப்துல்கலாம் அவர்களின் திட்டத்தினை ஆமோதித்து, அதே ஆண்டில் தனது சுதந்திர தின உரையில் PURA திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவெடுத்திருப்பதாக கூறினார். பின் அத்திட்டம் 7 மாநிலங்களில் சில குறிப்பிட்ட பகுதிகளில் சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு, 2004-ஆம் ஆண்டு நாட்டின் பல்வேறு கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் செயல்படுத்தப்பட்ட அதே ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாஜ்பாய் தோற்கடிக்கப்பட்டு, காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்றது. அதன்பிறகும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என அன்றைய பிரதமர் Dr. மன்மோகன் சிங் தெரிவித்தார். இருப்பினும் தனது கனவுத்திட்டமான PURA பற்றி Dr.அப்துல்கலாம் அவர்கள் "Target 3 Billion" என்ற புத்தகத்தில் 2011 ஆம் ஆண்டு விவரித்து எழுதியிருந்தார். இந்நிலையில் 24 பிப்ரவரி 2012 அன்று, அன்றைய Rural Development Minister திரு.ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் Dr.அப்துல்கலாம் அவர்களின் PURA திட்டத்தை கடுமையாக விமர்சித்ததோடு , அத்திட்டம் படுதோல்வி அடைந்ததாக அறிவித்தார். பின் PURA திட்டத்தின் சில அம்சங்களை மாற்றியமைத்து, Restructured PURA என தொடங்கிவைத்தார். ஆனால் அரசின் ஒத்துழைப்பின்மையால் அத்திட்டமும் தோல்வியை தழுவியதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு, திரு.நரேந்திரமோடி அவர்கள் வரலாறு காணாத மக்கள் ஆதரவோடு மகத்தான வெற்றி பெற்று பிரதமராக பதவி ஏற்றார். அவர் தலைமையிலான அரசு , ஆட்சி பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அன்றைய நிதியமைச்சர் திரு.அருண்ஜெட்லி அவர்கள் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டிலேயே (FY2014-2015) கிராமப்புற முன்னேற்றத்திற்கான ஓர் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு உடனடியாக அதனை செயல்படுத்தவில்லை. அதற்க்காக ஒரு குழு அமைத்து, அக்குழு மூலம் முன்பு செயல்படுத்தப்பட்ட PURA-ல் இருந்த குறைகளை கண்டறிந்து, அதனை சரிசெய்து கொள்ள சுமார் 1 ஆண்டுகள் எடுத்துகொண்டது. பின் 21 பிப்ரவரி, 2016 அன்று பிரதமர் திரு.நரேந்திரமோடி, Shyama Prasad Mukherji Rurban Mission(SPMRM) என்ற அத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் படி நாட்டில் பல்வேறு கிராமப்புற கூட்டமைப்புகளை (Cluster of Villages) தேர்வுசெய்து, அவற்றிற்கு நகர்ப்புறங்களில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு "நகர்ப்புற வாழ்வாதாரம் கொண்ட கிராமப்புறங்கள்(Clusters of Rurban villages)" உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதில் கிராமப்புற கூட்டமைப்புகளை கண்டறிந்து, அந்த கூட்டமைப்புகளை இரண்டு விதமாகப் பகுத்து மத்திய அரசு அவற்றை தேர்வு செய்கிறது.

1. பழங்குடியினர்கள் வாழும் கிராமப்புற கூட்டமைப்பு (Tribal Clusters)

2. பழங்குடியினரல்லதோர் வாழும் கிராமப்புற கூட்டமைப்பு (Non-Tribal clusters)

இவற்றின்கீழ் மத்திய அரசால் வெவ்வேறு அளவைகள் கொண்டு கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில் பல்வேறு கிராமப்புற கூட்டமைப்புகளில் இருந்து சில கூட்டமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, அந்த பட்டியல் மாநில அரசுக்கு அனுப்பப்படும். அந்த பட்டியல் மீண்டும் மாநில அரசால், பல்வேறு காரணிகளை கொண்ட Integrated cluster action plan (ICAP)-ன் உதவியோடு ஒப்பிடப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், Detailed Project Report(DPR) மாநில அரசால் உருவாக்கப்பட்டு, அது ஒப்புதல் பெறப்பட்டு SPMRM செயல்படுத்தப்படும்.

2016 ஆம் ஆண்டு இத்திட்டம் பற்றி அறிவிக்கப்பட்ட போது, சுமார் 300 cluster of rurban villages உருவாக்கப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அவற்றிற்கு இதுவரை ஒப்புதல் பெறப்பட்ட,

Cluster of villages -296

Integrated cluster action plans(ICAPs)- 287

Detailed Project reports(DPRs)- 234

இன்னும் 2ஆண்டுகளில் இந்த திட்டம், அதன் இலக்கை அடையும் என அரசு தெரிவித்துள்ளது.

2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி அன்றைய கிராமப்புற மக்களின் எண்ணிக்கை 83.3கோடி. இதனை 2001-ஆம் ஆண்டின் கணக்கெடுப்போடு ஒப்பிட்டால் சுமார் 12% அளவிற்கு கிராமப்புற மக்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதன்படி PURA திட்டம் படுதோல்வி அடைந்திருப்பது உறுதியாகிறது. இதேபோல 2021-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுபில் கிடைக்கும் தகவல்களை பொறுத்தே Dr. அப்துல்கலாம் அவர்களின் கனவுத்திட்டம், மத்திய அரசின் SPMRM திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டதா என்பது தெரியவரும்.

Similar News