நாடு முழுக்க உள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்காக ATL App உருவாக்கும் திட்டம்.!
நாடு முழுக்க உள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்காக ATL App உருவாக்கும் திட்டம்.!
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான அழைப்பைச் செயல்படுத்தும் வகையில் இந்திய கைபேசிச் செயலி உருவாக்குதலில் புதுமைச் சிந்தனை சூழல் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் முக்கிய நடவடிக்கையாக, நாடு முழுக்க உள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்கான `ATL App உருவாக்கும் தொகுப்பு' ஒன்றை நிதிஆயோக்கின் அடல் புதுமைச் சிந்தனை லட்சியத் திட்டம் (Atal Innovation Mission - AIM) தொடங்கியுள்ளது.
பள்ளிக்கூட மாணவர்களின் திறன்களை ச் செம்மைப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் உருவான பிளெஜ்மோ என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ATL App உருவாக்கல் தொகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வரக்கூடிய காலங்களில் அடல் புதுமை சிந்தனை லட்சியத் திட்டத்தின் பெயரில் அடல் சீராக்கல் ஆய்வகங்களின் முன்முயற்சியுடன், செயலிப் பயனாளர் என்ற நிலையிலிருந்து செயலியை உருவாக்குபவர்கள் என்ற நிலைக்கு நிலைமாற்றம் செய்யும் வகையில் இந்தத் திறன்களை வளர்ப்பது இதன் நோக்கமாகும்.
இந்த முயற்சி பற்றி கருத்து தெரிவித்த நிதி அமைப்பின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி அமிதாப் காந்த், கோவிட்-19 பாதிப்பு காரணமாக பெரிய தடங்கல் ஏற்பட்டுவிட்டது என்றும், தினசரி வாழ்வில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அந்தச் சூழ்நிலை கையாளப்பட்டு வருவதாகவும் கூறினார்.
ATL App உருவாக்கல் தொகுப்பு என்பது முற்றிலும் இலவசமான ஆன்லைன் கல்வித் திட்டமாகும். ஆறு செய்முறைத் திட்டங்களின் அடிப்படையிலான கற்றல் தொகுப்புகள், ஆன்லைனில் வழிகாட்டுதல் அமர்வுகள் இருப்பதால் பல்வேறு இந்திய மொழிகளில் செல்போன் ஆப்களை உருவாக்க இளம் புதுமைச் சிந்தனையாளர்கள் கற்றுக் கொண்டு, தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியும்.