மொபைல் செயலி மூலம் இந்தியர்கள் பல லட்சக்கணக்கானோரை உளவு பார்க்கும் சீனா - இந்தியாவை அசைக்க முடியாத சக்தியாக மாற்றப்போகும் அடுத்தகட்ட ஐடியா!
மொபைல் செயலி மூலம் இந்தியர்கள் பல லட்சக்கணக்கானோரை உளவு பார்க்கும் சீனா - இந்தியாவை அசைக்க முடியாத சக்தியாக மாற்றப்போகும் அடுத்தகட்ட ஐடியா!
டிஜிட்டல் இணையதள தொழில்நுட்பத்தில், உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், உலகில் மிக அதிக அளவில் மென்பொருள்கள் மற்றும் இணையதளப் பயன்பாட்டு நிறுவனங்கள் செயல்படும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது.
இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள், உள்நாட்டில் சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறையால் பிறப்பிக்கப்படும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, புள்ளி விவரப்பாதுகாப்பு மற்றும் தனி நபர் ரகசியங்களை மீறுவதாக அமையக்கூடாது.
எனினும், சில நிறுவனங்கள், நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றன.
இத்தகைய நிறுவனங்கள் சில செல்போன் செயலிகள் வாயிலாக, அவற்றை பயன்படுத்துவோரின் விவரங்களை சட்ட விரோதமாக திருடுவதுடன், அவற்றை வேறு சிலருக்கும் அனுப்பி வைக்கின்றனர்.
இதுபோன்ற புள்ளிவிவரத் தொகுப்பு, நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கக்கூடும்.
கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் எல்லையில் சீன அத்துமீறல்கள் நடந்து வரும் வேளையில், இந்தியாவில் சீனச் செயலிகளுக்குத் தடை விதித்து மத்திய அரசு உறுதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அண்மைக்காலத்தில் மளிகைப்பொருள்கள் கொள்முதல் (பிக் பேஸ்கட்), உணவு விநியோகம் (சொமாட்டோ மற்றும் ஸ்விகி), பயண டிக்கெட் முன்பதிவு ( மேக் மை ட்ரிப்) போன்ற சீனச் செயலிகள் இந்தியாவில் மிக ஆழமாகக் காலூன்றி உள்ளன.