கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க சிறப்பான ஆலோசனை வழங்கிய தல அஜித்.!

கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க சிறப்பான ஆலோசனை வழங்கிய தல அஜித்.!

Update: 2020-06-26 10:31 GMT

கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ள இடங்களில் ஆளில்லா விமானம்(ட்ரான்) மூலம் கிருமிநாசினி தெளிக்கும் சிறப்பான ஆலோசனையை நடிகர் அஜித் தான் வழங்கினார் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இந்த கொரோனா வைரஸ் தாக்கம் தினந்தோறும் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதுவும் சென்னையில் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.

தற்போது கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மண்டலங்களில் ஆளில்லா விமானம்(ட்ரான்கள்) மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனை செய்து வரும் மருத்துவர் கார்த்திகேயன் ஆளில்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் சிறந்த ஆலோசனையை அளித்தவர் நடிகர் அஜித் என கூறியுள்ளார்.


அந்த ட்ரான்களை கொண்டு அரை மணி நேரத்தில் 16 லிட்டர் கிருமிநாசினி தெளிக்க முடியும் என அஜித் கொடுத்த அறிவுரை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரை மணி நேரத்தில் ஒரு ஏக்கர் பரப்பளவில் கிருமி நாசினியை தெளிக்க முடியும். இதன் பேரில் பரிசோதனை நடத்தியதில் வெற்றி கிடைத்துள்ளது.

இதனை தல அஜித் ரசிகர்கள் அந்த வீடியோவை வைத்து ட்விட்டரில் #AjithLedDroneToFightCorona என்கிற ஹேஷ்டேகை ட்ரெண்டாகி உள்ளனர்.   

Similar News