சனாதனத்தை வேரறுப்போம் என்று சூளுரைத்து விட்டு இப்போது நாடகமா போடுகிறீர்கள்? ம.வெங்கடேசனின் பதிலடி!
சனாதனத்தை வேரறுப்போம் என்று சூளுரைத்து விட்டு இப்போது நாடகமா போடுகிறீர்கள்? ம.வெங்கடேசனின் பதிலடி!
கருப்பர் கூட்டம் யூட்யூப் சேனல் கந்தசஷ்டி கவசத்தைப் பற்றி இழிவாகப் பேசி தி.க, தி.மு.கவின் இந்து விரோதப் போக்கை இன்றைய தலைமுறையினருக்கு வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டி விட்ட நிலையில் தேர்தல் அச்சத்தில் தி.மு.க தாங்கள் இந்து விரோத கட்சி இல்லை என்று தொடங்கி இந்துக்கள் சுயமரியாதையோடு வாழ வழி வகுத்ததே தாங்கள் தான் என்று ஆணவத்தில் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு பதிலடியாக இது வரை எப்படியெல்லாம் இந்துக்களையும் இந்து மதக் கடவுளர்களையும் தி.மு.க தலைவர்கள் ஏசி இருக்கின்றனர், இழிவுபடுத்தி இருக்கின்றனர் என்று பட்டியலிட்டிருக்கிறார் பா.ஜ.க தலைவரும் எழுத்தாளருமான ம.வெங்கடேசன். அவரது பதிவுகள் பின்வருமாறு,
"திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சியே!
1. இந்து என்றால் திருடன் என்று கேவலப்படுத்தினார் கருணாநிதி.
2. இராமன் எந்த இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தார் என்று நக்கலடித்தார் கருணாநிதி.
3. முன்னாள் எம்.பி சங்கராபுரம் ஆதிசங்கர் நெற்றியில் வைத்திருந்த குங்குமம் வேர்வையில் நனைந்து வழிந்தோடியபோது நெற்றியில் ரத்தம் சொட்டுகிறது என்று அவமானப்படுத்தினார் கருணாநிதி.
4. திமுகவில் கடவுள் பக்தி கொண்ட சிலபேர் இருக்கலாம். ஆனால் அதற்காக கோயில் விழாக்களில் தீ மிதிக்கும் காட்டுமிராண்டித்தனத்தை நான் அனுமதிக்கமாட்டேன் என்று தீ மிதித்தலை கேவலப்படுத்தினார் கருணாநிதி.
5. சட்டமன்றத்தில் ஒருவர் கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுமா என்று கேட்கப்பட்டபோது, இறைவனைச் சுற்றித்தான் ஒளிவட்டம் இருக்குமே... பின் ஏன் அங்கு மின்சாரம். வழங்கப்படமாட்டாது என்று (29-12-96) நக்கலடித்தார் கருணாநிதி.
6. இந்து மத சன்னியாசிகளெல்லாம் சேலை கட்டிய மாதரை நம்பாதே என்று சொல்லியிருக்கிறார்கள். அப்படியென்றால் சேலை கட்டாத மாதரை நம்ப வேண்டும் என்றுதானே அர்த்தம்? என்று குதர்க்கமாக பேசி சன்னியாசிகளை அசிங்கப்படுத்தினார் கருணாநிதி.