கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூர்யா தேவி திடீர் தலைமறைவு; கண்டுபிடிக்க முடியாமல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த மாநகராட்சி.!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூர்யா தேவி திடீர் தலைமறைவு; கண்டுபிடிக்க முடியாமல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த மாநகராட்சி.!

Update: 2020-07-27 07:59 GMT

நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணத்தைப் பற்றி சர்ச்சையான பல கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டவர் சூர்யா தேவி. இதன் பின்பு சூர்யா தேவி மீது நடிகை வனிதா விஜயகுமார் சென்னை வடபழனியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரை ஏற்ற காவல்துறை சூர்யா தேவியை கைது செய்தனர்.

தற்போது இருக்கும் சூழ்நிலையால் சூர்யா தேவிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அவரை பரிசோதனை செய்வதற்கு அழைத்துச் சென்ற பெண் காவல் ஆய்வாளர் ஜோதிக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை முடிவுகளில் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த தகவலை அறிந்த சூர்யா தேவி திடீரென தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சூர்யா தேவியை சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்துள்ளனர். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியாததால், சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சூர்யா தேவி மீது புகார் கொடுத்துள்ளனார்.   

Similar News