கொரோனா காரணமாக செக்யூரிட்டியாக மாறிய நடிகர்.!

கொரோனா காரணமாக செக்யூரிட்டியாக மாறிய நடிகர்.!

Update: 2020-07-16 11:28 GMT

உலகை மிரட்டும் கொரோனாவைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இந்தியாவிலும் இதன் கோரத்தாண்டவம் பலமாக உள்ளது. மேலும் இந்த வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனைத்தொடர்ந்து மக்களிடையேயும்,சினிமா துறையினரும் பல விஷயங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.கடந்த 4 மாதமாக பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் தங்கள் தொழில்களை மாற்றியுள்ளனர்.

பிரபலங்களாக இருக்கும் சினிமா நடிகர், நடிகைகளும் படப்பிடிப்புகள் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில நடிகர்கள் மளிகை கடை திறந்துள்ளனர். சிலர் காய்கறிகள் விற்கின்றனர். சில நடிகர்கள் பழங்கள் விற்று வருகின்றனர். கேரளாவில் நடிகர் ஒருவர் மீன் கடை திறந்துள்ளார். இந்நிலையில் பிரபல கன்னட நடிகரும் இயக்குனருமான ஶ்ரீநாத் வசிஸ்தா, செக்யூரிட்டியாக மாறி இருக்கிறார். இவர் மந்தனா,டாக்டர் சுகன்யா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் துணை நடிகராகவும் பச்சன் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர் கூறியிருப்பது:

நான் வசிக்கும் அடுக்குமாடி கட்டிடதில் செக்யூரிட்டியாக பணிபுரிந்த நபருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மேலும் அவருடன் இருந்த மூன்று செக்யூரிட்டிகள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அதனால் குடியிருப்பு சங்கம், செக்யூரிட்டியாக பணியாற்றும்படி கேட்டுக்கொண்டது. அதனால் எனது ஷிப்ட் 2 மணியில் இருந்து இரவு 10 மணி வரை. நேற்று என் மகன் செக்யூரிட்டியாக இருந்தான். என்று அவர் தெரிவித்திருந்தார் மேலும் இது எனக்கு புது அனுபவமாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.

Similar News