அடுத்தடுத்து கிடப்பில் போடப்படும் விக்ரம் படங்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி!

அடுத்தடுத்து கிடப்பில் போடப்படும் விக்ரம் படங்கள் - ரசிகர்கள் அதிர்ச்சி!

Update: 2020-07-22 12:51 GMT

விக்ரம் நடிப்பில் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் உருவாக இருந்த படம் மகாவீர் கர்ணா படம். இந்த படம் தற்போது கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் இயக்கும் மஹாவீர் கர்ணா படத்தில் நடிக்க சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒப்பந்தமானார் விக்ரம்.

இந்த படம் 300 கோடி ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமாக உருவாக இருந்தது. இந்தப் படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். இந்த படம் மேலும் மூன்று மொழிகளில் தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப் படும் என்ற அறிவிப்புகளுடன் விறுவிறுப்பாகத் தொடங்கிய முதல்கட்ட படப்பிடிப்பை அடுத்து படப்பிடிப்பு இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் விக்ரம் தனது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடிக்க முடிவெடுத்தார்.

கர்ணா படத்தின் தாமதம் குறித்து தெரிவித்துள்ள படக்குழு கர்ணா படம் கொஞ்சம் தாமதமாகியுள்ளது. படப்பிடிப்புத் தொடங்கினால் இடைநிற்றல் இல்லாமல் படத்தை முடிக்க வேண்டும் என விக்ரம் கூறியுள்ளார். அதனால் படப்பிடிப்பு குறித்து விரிவான தகவல்களை விக்ரமிடம் ஒப்படைக்க இருக்கிறார் இயக்குனர் விமல்.

மேலும் இந்த படம் பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாததால்,இயக்குனர் விமல் மற்றொரு படத்தை இயக்க சென்றுள்ளார்.

ஏற்கனவே விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் பெரும்பாலான படப்பிடிப்பு பணிகள் முடிந்து ரிலிஸாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News