கருப்பர் கூட்டத்தை எதிர்த்து அவர்களுக்கு "விமர்சிக்க முடியாத அளவு தண்டனை இருக்க வேண்டும்" விளாசும் சரத் குமார்.!

கருப்பர் கூட்டத்தை எதிர்த்து அவர்களுக்கு "விமர்சிக்க முடியாத அளவு தண்டனை இருக்க வேண்டும்" விளாசும் சரத் குமார்.!

Update: 2020-07-18 11:30 GMT

தெய்வ வழிபாடு, நம்பிக்கை, இவைகளைக் கொச்சைப் படுத்துவர்களுக்குக் கொடுக்கிற தண்டனை இனி ஆண்டாண்டு காலத்திற்கு பேசும்படி தண்டனை இருக்க வேண்டும் என்றும் ஹிந்துக் கடவுள்களை விமர்சிக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும் என நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான ஆர்.சரத்குமார் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பேசியிருப்பது: கறுப்பர் கூட்டமே நீங்கள் இயக்கிவிடப்பட்ட மூடர்கள். "உதவிசெய்யாவிட்டாலும் பிறருக்கு இன்னல் தரவேண்டாம்" என்பது பழமொழி.

அதுபோல இவர் ஹிந்துக்கடவுள்களை விமர்சிக்க முடியாத அளவிற்கு தண்டனை இருக்க வேண்டும். கனவில்கூட அவர்களுக்கு அந்த எண்ணம் வரக்கூடாது, தப்பித் தவறி கனவில் வந்தால் உடனே எழுந்து மன்னிப்பு கேட்கவேண்டும்.எந்த மதத்தையும் இழிவு படுத்தக்கூடாது என்ற எண்ணத்தோடு அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் நம்மிடையே பிரிவினை என்ற விஷத்தை விதைப்பவர்கள் இவர்கள் என்றும் விமர்சிக்கின்ற கூட்டத்தைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து பாடம் புகட்டவேண்டும் என்றார்.

முருகா நான் சிறப்பாக, ஆரோக்கியமாக நோய் நொடியில்லாமல் வாழ்வதற்கு என் உடலில் உள்ள அனைத்து அங்கங்களைப் பாதுகாப்பாயாக என வேண்டுவதில் கறுப்ப மந்தைகளே உங்களுக்கு என்னடா பிரச்சனை. கறுப்பர் கூட்டமே உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். இவ்வாறு தன் ஆதங்கத்தை வெளியிட்டார் இவர் கூறிய கருத்திற்கு அனைவரும் அதற்கேற்றார்போல கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Similar News