நடிகர் அரவிந்த்சாமி சூப்பர்ஸ்டார் பட வாய்ப்பை உதறித் தள்ளியது ஏன்.?

நடிகர் அரவிந்த்சாமி சூப்பர்ஸ்டார் பட வாய்ப்பை உதறித் தள்ளியது ஏன்.?

Update: 2020-07-15 11:12 GMT

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகிய படம் லூசிபர். மேலும் ரசிகர்களிடையே பெருமளவில் வரவேற்பை பெற்ற பிரமாண்ட வெற்றி திரைப்படம். இந்த மெகா ஹிட் படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், பிரித்திவிராஜ், விவேக் ஓபராய் என்ற பல முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடித்திருந்தனர்.

இந்த படம் 175 கோடிக்கு வசூல் சாதனையை படைத்தது. மேலும் இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளனர். அப்படத்தில் ரீமேக் உரிமத்தை நடிகர் ராம்சரண் கைப்பற்றியுள்ளார். மேலும் அப்படத்தை அவரது தந்தை சிரஞ்சீவி தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை இயக்க சாஹோ படத்தை இயக்கிய சுஜித்தும் கையெழுத்திட்டுள்ளார். லூசிபர் படத்தில் நடிகர் விவேக் ஓபராய் கெத்தான, முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்நிலையில் தெலுங்கில் அவரை நடிக்க அழைத்ததால் அவர் ஏற்கனவே நடித்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க எனக்கு விருப்பமில்லை என்று கூறியிருக்கிறார்.

எனவே அந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் அரவிந்த்சாமி இடம் கேட்டபோது அவர் கால்ஷீட் பிரச்சனையால் அந்தப் படம் வேண்டாம் என முடிவெடுத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறியுள்ளன. மேலும் இப்படத்திற்கு வில்லனாக தற்போது ரகுமானிடம் பேசி உறுதி செய்யபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Similar News