பெண்ணுரிமையாவது புண்ணாக்காவது, மனைவி கோவிலுக்கு போவதைத் தடுக்க என்ன செய்தார் ஈ.வெ.ராமசாமி?

பெண்ணுரிமையாவது புண்ணாக்காவது, மனைவி கோவிலுக்கு போவதைத் தடுக்க என்ன செய்தார் ஈ.வெ.ராமசாமி?

Update: 2020-07-21 12:27 GMT

பெரியார் படத்தைப் போட்டுக் கொண்டு பகுத்தறிவு சொல்லித் தருகிறேன் என்று இந்து மத நூல்களையும் நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தி சுய இன்பம் காண்பதே திராவிடர் கழக அடிப்பொடிகளின் வழக்கம். 'அந்தப் புராணத்தில் ஆபாசம் இருக்கிறது, இந்த இதிகாசத்தில் அசிங்கமாக எழுதியிருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு ஆன்மீக நூலா? இது தான் இந்து மதத்தில் கடவுள் பக்தியா? மனுசனா கூட மதிக்க முடியாதவன கடவுளா எப்படி கும்பிடுவத' என்றெல்லாம் கூப்பாடு போடுவார்கள்.

சமஸ்கிருதத்தைப் படிக்காதே என்பார்கள்; ஆனால், அவர்கள் படித்தது போல ஸ்லோகங்களுக்கு எல்லாம் அர்த்தம் சொல்வார்கள். அள்ள அள்ளக் குறையாத சனாதன தர்ம சாஸ்திரங்களையும் ஸ்மிருதிகளையும் ஆபாசம், அருவருப்பு என்பவர்கள் தங்கள் தலைவன் ஈ.வே.ராமசாமியைப் பற்றி 'ஆகா! ஓகோ!' வென்று புகழ்வார்கள்; பெண்கள் முன்னேற்றமே அவரால் தான் என்று வாய் கூசாமல் புளுகுவார்கள். வாய் நிறையச் சொல்லும் ஸ்லோகமானாலும், கை வலிக்க செதுக்கிய சிற்பமானாலும் இவர்கள் கண்களுக்குத் தெரிவது ஆபாசம் மட்டுமே. இதற்கெல்லாம் ஆரம்பம் என்ன என்று யோசிப்போர் ஈ.வே.ராமசாமி நாயக்கரின் வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப்‌ பார்க்க வேண்டும்.

அதில் ஒரு பகுதியை‌ திராவிடர் கழக கூட்டத்தின் பார்வைக்காக பதிவிட்டிருக்கிறார் எழுத்தாளர் ம.வெங்கடேசன். விழாக் காலங்களில் எப்பொழுதாவது கோவிலுக்கு செல்லும் வழக்கம் கொண்டிருந்த தனது மனைவி நாகம்மையின் பழக்கத்தை மாற்ற நினைத்த ராமசாமி நாயக்கர், ஒரு முறை நாகம்மை சில பெண்களுடன் கோவிலுக்குச் சென்ற போது தனது நண்பர்களுடன் மாறு வேடத்தில் சென்று நண்பர்களை தனது கட்டிய மனைவியின் மீதே ஏவி விட்டிருக்கிறார்.

Similar News