கோவை துடியலூரில் ஐந்து காவலர்கள் கொரோனாவால் பாதிப்பு - காவல் நிலையம் மூடல்.!

கோவை துடியலூரில் ஐந்து காவலர்கள் கொரோனாவால் பாதிப்பு - காவல் நிலையம் மூடல்.!

Update: 2020-07-12 08:56 GMT

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள துடியலூர் காவல் நிலையத்தில் வேலை பார்க்கும் ஐந்து காவலர்களுக்கு இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் திருமண மண்டபத்தில் காவல் நிலையம் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் ரோடு துடியலூர் காவல் நிலையம் இருக்கிறது. அங்கு வேலை பார்க்கும் 31 காவலர்களுக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் இன்று வந்த பிறகு ஐந்து காவலர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் நான்கு ஆண் காவலர்கள், ஒரு பெண் காவலர் உள்பட 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடி சீல் வைக்கப்பட்டு, காவல் நிலையம் முழுவதும் கிருமி நாசினிதெளிக்கப்பட்டுள்ளது.


தற்போது இந்த காவல் நிலையம் அடுத்த நான்கு நாட்களுக்கு வேணுகானம் திருமண மண்டபத்தில் தற்காலிகமா இயங்கும் என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.   

Similar News