ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Update: 2020-07-12 10:26 GMT

கொரோனா வைரஸ் தொற்றால் பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பாலிவுட்டின் பிதாமகராக கருதப்படும் அமிதாப் பச்சனும் இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார்.

நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்ட அவர் "எனக்கு எடுக்கப்பட்ட கோவிட்-19 சோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளது.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.. மருத்துவமனை ஊழியர்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.. எனது குடும்பத்திற்கும் பணியாளர்களுக்கும் சோதனை செய்யப்பட்டு முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்..கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவரையும் சோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.

மும்பை நானாவதி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது அபிஷேக் பச்சனின் மனைவியும் பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆராத்யாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News