பிரபல நடிகை மற்றும் மொத்த குடும்பத்திற்கே கொரோனா பாதிப்பு.!

பிரபல நடிகை மற்றும் மொத்த குடும்பத்திற்கே கொரோனா பாதிப்பு.!

Update: 2020-07-12 02:51 GMT

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா பாதிப்பு அனைத்து நாடுகளிலும் அதிக அளவில் பரவத் தொடங்கியது. இந்த பாதிப்பு இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை.இந்த வைரஸ் தொற்று உலக அளவில் 5 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை பலி வாங்கியுள்ளது.

இந்தியாவில் இந்த வைரஸ் பாதிப்பு 8 லட்சத்து மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர். இந்த வைரஸ் தொற்று அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது இதை தடுக்க அரசாங்கம் பல நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த வைரஸ் தொற்று அரசியல்வாதிகள் மற்றும் சினிமா துறையினரையும் விட்டுவைக்கவில்லை.

இந்நிலையில் பெங்காலி மொழி நடிகை "கோயல் மாலிக்" என்பவருக்கும் தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.அவர் மட்டுமின்றி அவரது கணவர், தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை நடிகை கோயல் மாலிக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நான் என்னை தனிமை படுத்தி கொண்டேன் என்றும் பதிவிட்டிருந்தார்.கோயல் மாலிக்கின் தந்தை பழம்பெரும் நடிகர் ரஞ்சித் மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு வயது 76 ஆகிறது. கோயல் மாலிக்கின் அம்மாவிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Similar News