"காஃபிர்களைத் துரத்துங்கள்!" "இந்து பெண்களை தூக்கிச் செல்லுங்கள்" - என்னதான் நடந்தது டெல்லி கலவரத்தில்?
"காஃபிர்களைத் துரத்துங்கள்!" "இந்து பெண்களை தூக்கிச் செல்லுங்கள்" - என்னதான் நடந்தது டெல்லி கலவரத்தில்?
டெல்லியில் நடந்த இந்துக்களுக்கு எதிரான திட்டமிடப்பட்ட வன்முறையில் தில்பர் நெகி என்ற 20 வயது இளைஞர் கடந்த பிப்ரவரி 24 அன்று உயிருடன் எரிக்கப்பட்டார். ஷிவ் விகார் என்ற சிறிய பகுதியில் இந்த சம்பவத்தைப் போல் பல வன்முறைகள் நிகழ்ந்த நிலையில் அவற்றின் மீது இதுவரை பத்து குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நெகி கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின் முற்றிலுமாக எரிந்து போன அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. உடற்கூறு ஆய்வு முடிவுகளில் இருந்து பின்வரும் தகவல்கள் கிடைத்துள்ளன. அவரது முகம் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்திருந்தது; இரு கால்களையும் காணவில்லை; மண்டை ஓடே தெரியுமளவுக்கு தலை எரிந்து போயிருந்தது. இரு நுரையீரல்களும் கல்லீரலும் கடினப்பட்டுப் போய் உறைந்திருந்தன.
நெகி வேலை பார்த்து வந்த ஸ்வீட் கடையின் உரிமையாளர் அனில் குமார் அந்தக் கடையைக் கடந்த இருபது ஆண்டுகளாக நடத்தி வருகிறார். வழக்கம் போல மதியம் 1.30 மணியைப் போல் மதிய உணவு உண்ட பிறகு கடையின் குடவுனில் ஓய்வெடுக்க சென்றிருக்கிறார். அரை மணி நேரத்திற்கு பிறகு கடையில் இருந்த அனில் குமாரும் பிற பணியாளர்களும் வெளியே கற்கள், கம்புகள் மற்றும் துப்பாக்கிகளுடன் ஒரு முஸ்லிம் கும்பல் வருவதைப் பார்த்துள்ளனர்.
"அந்த கும்பலில் இருந்தவர்கள் 'காஃபிர்களை இந்த நாட்டை விட்டு துரத்தி விடுவோம்; காஃபிர்களைக் கொன்று விட்டு இந்துக்களின் பெண் குழந்தைகளை இழுத்துச் செல்வோம்' என்பது போன்ற கோஷங்களை எழுப்பினர். இந்துக்களை தரக்குறைவாக பேசியதோடு 'இந்து முராதாபாத்' என்றும் கோஷம் எழுப்பினர்" என்று அனில் குமார் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
மற்றொரு சாட்சியும் இதே போன்று வாக்குமூலம் அளித்துள்ளார். "இந்துக்களைத் துரத்தி விட்டு அவர்களின் அன்னையரையும் மகள்களையும் எடுத்துக் கொள்வோம் என்று கத்திக் கொண்டு இருந்தனர்" என்று ஒருவர் சாட்சி கூறியதாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.