சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நாஞ்சில் முருகேசன் கூட்டாளிகள் கைது.!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நாஞ்சில் முருகேசன் கூட்டாளிகள் கைது.!

Update: 2020-07-29 02:22 GMT

கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அவர்கள் கடந்த 27.07 2020 அன்று நாகர்கோவில் அனைத்து மகளீர் நிலையத்தில்  15 வயது சிறுமிக்கு அவரின் தாயாரின் உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பாலியல் கொடுமை நடத்தபட்டதாக தெரிவித்துள்ளார் .

சிறுமியின் தாயார் பணத்திற்கு சிறுமியை 4 நபர்களுக்கு பாலியல் கொடுமை நடத்தப்பட அனுமதித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

மேலும்  நாகர்கோவில் புத்தேரி பகுதியை சார்ந்த  நாஞ்சில் முருகேசன்(EX MLA) ( 60 ) , இடலாக்குடி பகுதியை சார்ந்த பால் ( 66 ) , அசோக்குமார் ( 43 ) மற்றும் கோட்டார் பகுதியை சார்ந்த கார்த்திக் ( 28 ) ஆகியோரை சிறுமியின் தாயாரே பணத்திற்காக வெவ்வேறு சந்தர்பங்களில் சிறுமிக்கு பாலியல் கொடுமை நடத்த அனுமதித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது…

சிறுமியின் முழு வாக்குமூல அறிக்கையையும், குழந்தைகள் நலக்குழுவினர் மாவட்ட ஆட்சிதலைவருக்கும் அனுப்பியிருக்கிறார்கள்.   இதைத் தொடர்ந்து நாஞ்சில் முருகேசனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அ.தி.மு.க தலைமை முதலில் நீக்கியுள்ளது. பின்னர், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சிறார் வதையில் ஈடுபட்டதால் நாஞ்சில் முருகேசன் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது.

இது தொடர்பாக அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண் 31/20 u / s 3 ( a ) , 4 , 7 , 8 , 11 ( 3 ) , 12 , 17 of POCSO Act- ன் படி 27.07.2020 அன்று சிறுமியின் தாயார் உட்பட மேற்படி 05 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது . மேற்படி குற்றவாளிகளை கைது செய்ய மாவட்ட குற்ற பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர்  கணேசன் நாகர்கோவில் உட்கோட்டம் அவர்கள் தலைமையில் 05 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது .

மேற்படி 05 பேரில் நாஞ்சில் முருகேசன் நீங்கலாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .  நாஞ்சில் முருகேசனையும் கைது செய்ய தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கு விசாரணை  நடைபெற்று வருகிறது.

15 வயது சிறுமியை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பலாத்காரம் செய்த செய்தி வெளியாகி நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

Similar News