புதுச்சேரி: சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு பழைய சாதி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.!

புதுச்சேரி: சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு பழைய சாதி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம் முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.!

Update: 2020-07-23 10:57 GMT

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று கொண்டி இருக்கும் நேரத்தில் பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில்,

2020-21-ம் ஆண்டு தொழில்முறை படிப்பு மற்றும் கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளுக்கு கல்லூரிகளில் சேர இருக்கும் மாணவ-மாணவிகள் இணையதளம் மூலம் ஆன்லைனில் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இது சம்பந்தமான அறிவிப்பில் வருவாய் துறையிடம் இருந்து பெறப்பட்ட சாதி மற்றும் குடியிருப்பு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது.

Similar News