எலியும்,பூனையுமாக இருந்தவர்கள் சற்று தன் கோபத்தை இறக்கி வைத்துவிட்டு நண்பர்களாக மாறிய அதிசியம்.!

எலியும்,பூனையுமாக இருந்தவர்கள் சற்று தன் கோபத்தை இறக்கி வைத்துவிட்டு நண்பர்களாக மாறிய அதிசியம்.!

Update: 2020-07-20 06:18 GMT

தமிழ் சினிமாவில் பாசத்துக்குரிய பாரதிராஜா என்று அழைக்கப்படுவர் பாரதிராஜா. மேலும் பல வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் பாலா இவர்களுக்கிடையே நடந்து ஒரு பிரச்சினை இவர்களை எலியும், பூனையுமாக கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.சில மாதங்களாக குற்றப்பரம்பரை என்ற கதையை படமாக உருவாக்குவதற்காக பாரதிராஜா மற்றும் பாலாவுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது குறிப்பிடத்தக்கது.

இருவரும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அவதூறான வார்த்தைகளை வெளியிட்டு, தாங்களாகவே அசிங்கப்படுத்திக் கொண்டனர் என்று தான் கூற வேண்டும்.இந்நிலையில் பாரதிராஜாவிற்கு தற்போது பிறந்தநாள் கொண்டாடினர். அதற்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்திருந்தனர். முக்கியமாக அவருக்கு "தாதா சாகேப்பால்கே" விருது வழங்க வேண்டும் என்று திரையுலகினர் அனைவரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதுக்குறித்து திரையுலகினர் ஒன்றுகூடி அமைச்சருக்கு கடிதத்தின் மூலம் பாரதிராஜாவுக்கு "தாதா சாகேப் பால்கே" விருதை கொடுக்கவேண்டும் என்பது போல அந்த கடிதத்தில் குறிப்பிட்டு எழுதினார்.இதற்கு ஆதரவு அளிக்கும் விதத்தில் இயக்குனர்கள் பலரின் பெயரும் முக்கியமாக "பாலாவின்" பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால் சினிமா வட்டாரத்தில் இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சண்டையிட்டுக் கொண்ட இருவரும் எப்படி நண்பர்களாக மாறினர் என்று நெகிழி்ச்சியில் உள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னதாக இவர்கள் நேரடியாக சந்தித்து சமரசமாகி தற்போது நண்பர்களாக விட்டார்களாம். குற்றப்பரம்பரை படத்தை தற்போது பாரதிராஜா வெப் சீரியலாக எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.விட்டுக் கொடுத்தார் கெட்டுப் போவதில்லை, மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனுஷன் அதை மன்னிக்கறவன் அதவிட பெரிய மனுஷன் என்ற பழமொழிக்கு இணங்க இருவரும் நடந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இருவருக்கும் பஞ்சாயத்து நடத்தி வைத்து தலைவர் யார் என்று தெரியவில்லை..

Similar News