ராஜஸ்தானில் கடைசி சுவாசத்தில் காங்கிரஸ் ஆட்சி : சச்சின் பைலட் டெல்லியிலிருந்து வெளியிட்ட ஆதரவாளர்கள் வீடியோவால் தேசிய அரசியலில் பரபரப்பு.!
ராஜஸ்தானில் கடைசி சுவாசத்தில் காங்கிரஸ் ஆட்சி : சச்சின் பைலட் டெல்லியிலிருந்து வெளியிட்ட ஆதரவாளர்கள் வீடியோவால் தேசிய அரசியலில் பரபரப்பு.!
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள கோஷ்டி சண்டையால் மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த சட்ட சபை தேர்தலின் போது காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை என்றாலும் அசொக்கேலாட்டின் பெயரும், சச்சின் பைலட்டின் பெயரும் அடிபட்டன. மாநிலத்தில் உள்ள அதிக காங்கிரசார் மற்றும் இளைஞர் காங்கிரசார் நன்கு படித்த இளைஞரும் ,வேகமாக செயல்படுபவருமான சச்சின் பைலட்தான் முதல்வரவார் என விரும்பினர். பைலட்டும் மிக தீவிரமாக தேர்தல் பணியாற்றினார் என கூறப்படுகிறது.
ஆனால் சோனியாவும், ராகுலும் மாநிலத்தில் செல்வாக்குடைய சச்சின் பைலட்டை பின்னுக்கு தள்ளிவிட்டு தங்கள் குடும்ப விசுவாசியான அசோக் கேலாட்டை முதல்வராக்கினர்.
ஏற்கனவே பா.ஜ.க-வுக்கு நெருக்கமான இடங்களை மட்டுமே பெற்று குறைந்த பெரும்பான்மையில் காங்கிரஸ் காலத்தை ஒட்டி வந்த நிலையில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் அடிக்கடி பல விவகாரங்களில் உட்கட்சி பூசல்களில் ஈடுபட்டார்கள் என கூறப்படுகிறது. அப்போதெல்லாம் அசோக் கெலாட் இது பா.ஜ.க-வின் சதி என்று கூறி வந்தார். பா.ஜ.க அதிருப்தியாளர்களை பயன்படுத்தி ஆட்சி அமைக்க பார்ப்பதாக கூறி வந்தார்.
இந்த நிலையில் பைலட்டுக்கும், கேலாட்டுக்கும் கருத்து வேறுபாடுகள் முற்றிய நிலையில், சென்ற வாரம் எம்.எல்.ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க பா.ஜ.க முயல்வதாகக் குற்றம்சாட்டி முதல்வர் அசோக்கெலாட் 90-க்கும் மேற்ட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை தனியார் தங்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தார்.
இந்நிலையில் துணை முதல்வர் சச்சின் பைலட் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளார். அவருக்கு குறிப்பிட்ட எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு இருப்பதாகவும்,ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் டெல்லி அருகே குருகிராமில் உள்ள ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனால் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.