மீரா மிதுன்க்கு எச்சரிக்கை விடுத்த சனம் ஷெட்டி!

மீரா மிதுன்க்கு எச்சரிக்கை விடுத்த சனம் ஷெட்டி!

Update: 2020-08-07 03:24 GMT

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஒரே நபர் மீராமிதுன் மட்டுமே. இவர் சமூக வலைத்தளங்களில் தேவையில்லாமல் பல வீடியோக்களை பரப்பி வருவதாக கூறப்படுகிறது.

தற்போது நடிகர் சூர்யா மற்றும் நடிகர் விஜய் குறித்து அவதூறாக பேசி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ பார்த்த சூர்யா,விஜய் ரசிகர்கள் அவரை கண்டபடி விளாசி வருகின்றனர்.

அதையும் அவர் கண்டுக்காமல் நடிகர் விஜய் மனைவியையும், நடிகர் சூர்யா மனைவியையும் அவதூராக பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

இதையடுத்து மீரா மிதுனுக்கு சனம் ஷெட்டி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.அவர் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோவில் எஸ் ஏ சந்திரசேகர் உதவியால் தளபதி விஜய் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கலாம். ஆனால் அவரது புகழையும் யாராலும் தற்போது வாங்க முடியாது. ஒரு சினிமாவில் இவர் வெற்றி பெறுவதற்கு ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது அதனை அடுத்து அவர் மென்மேலும் அவரது பணியை சிறப்பாக செய்து வந்திருக்கிறார்.

மேலும் அவர் மாதிரி உயர்ந்த இடத்திலுள்ள ஒரு நடிகரை பேசுவதற்கு ஒரு தகுதி வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார் சனம் ஷெட்டி. இவர்கள் போல் உள்ளவர்களை பேசுவதற்கு ஆயிரம் தடவை யோசிக்க வேண்டும்.

மேலும் நீங்கள் செய்யும் விமர்சனத்திற்கு பதில் அளிக்க மாட்டார் ஏனென்றால் அவர் உயர்ந்த நோக்கத்தில் உள்ளவர். உங்களுக்கு அவர் பதிலளிக்க வேண்டும் என்று அவசியமும் கிடையாது என்று ஆவேசமாக கூறியிருந்தார். மீராமிதுன் உனக்கு பதில் சொல்ல நானே போதும் என்றும் கூறியிருந்தார் சனம் ஷெட்டி.

இனிமேல் தயவு செய்து சைபர் புல்லிங்,பெண்ணுக்கு அராஜகம் போன்ற காமெடியான பதிவுகளை இட வேண்டாம் என்றும் இவர் ஆவேசமாக கூறியிருந்தார்.

Similar News