ராஜிவ் காந்திதான் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் !! திக்விஜய சிங் உளறல் ..!
ராஜிவ் காந்திதான் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டினார் !! திக்விஜய சிங் உளறல் ..!
ராமர் கோவிலின் பூமி பூஜை ஆகஸ்ட் 5 நடக்கவுள்ள நிலையில்,காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான திக்விஜய சிங், முன்பே முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டியதாக கூறியுள்ளார்.
"முன்பே அடிக்கல் ராஜிவ் காந்தியால் நடப்பட்டது," என்று செய்தியாளர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
#WATCH Foundation stone has already been laid, Rajiv Gandhi ji did it: Digvijaya Singh, Congress on being asked about Kamal Nath's statement that Rajiv Gandhi also wanted #RamTemple to be constructed pic.twitter.com/BvViPC2KSI
— ANI (@ANI) August 3, 2020
"அயோத்தியில் ராமர் கோவில் வரவேண்டும் என்று முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி விரும்பினார் என்னும் கமல் நாத் கூற்றுக்கு," திக்விஜய சிங் பதிலளித்தார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை வரவேற்பதாக சனிக்கிழமை கமல் நாத் கூறினார். தன்னுடைய கூற்று கட்சி வாக்கை அதிகரிக்கும் என்பதறிந்து, ராமர் கோவில் கட்டுவதை வரவேற்ப்பதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அமைச்சகத்தால் பகிரப்பட்டுள்ளது.
மேலும் ஒரு படிசென்று பூமி பூஜைக்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 4 போபாலில் தனது இல்லத்தில் " ஹனுமான் சாலிசா" மத்திய பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் அமைச்சகத்தால் நடத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.
தற்போது காங்கிரஸ் இந்த திடீர் நிலைமாற்றம் மிகப்பெரியதாக கருதப்படுகின்றது . இவர்களே முன்னதாக கடவுள் ராமர் இருப்பதை ஒப்புக்கொள்ளவில்லை. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து இவர்கள் வெளியிட்டுள்ளது, மூத்த தலைவர்கள் மற்றும் மக்கள் வரலாற்றை மறந்திருப்பார்கள் என்று கருதி கூறப்படுகின்றது.