ஆரியர்-திராவிடர் வாதம் உருவான வரலாறு - மிஷன் காளி இயக்கம்.!
ஆரியர்-திராவிடர் வாதம் உருவான வரலாறு - மிஷன் காளி இயக்கம்.!
காமராஜர் தோற்று திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுள்ள கல்விகொள்கை எதிர்ப்புவரை தமிழகம் சந்திக்கும் அத்தனை பிரச்சனைகளுக்கும் அடிநாதமாக இருப்பது ஆரியர் படையெடுப்பு திராவிடர் ஒடுக்கம் என்கிற இரண்டு கொள்கைகள் தான்.
இவற்றின் ஊற்றுக்கண் 1835ல் வெளியான On the Conjugation System of Sanskrit in comparison with தட் of Greek, Latin, Persian and Germanic என்கிற ஒரு ஆராய்ச்சிக்கட்டுரை. இந்த கட்டுரையை எழுதியவர் Franz Bopp எனும் ஜெர்மானியர். இவர் சமஸ்க்ருதம், லத்தீன், ஜேர்மனிய, பாரசீக, கிரேக்க மொழிகளிடையே இருக்கும் இலக்கண மற்றும் ஒலிக்குறிப்பு ஒற்றுமையை பார்த்தார். இந்த ஒற்றுமைக்களின் அடிப்படையில் இவை ஒரே பண்டை மொழியில் இருந்து வந்திருக்க வேண்டும் என்கிற முடிவை எடுத்தார்.
இது ஒரு அடிப்படை கட்டமைப்பு. இதன்மேல் எப்படி ஆரியர் என்கிற வார்த்தை ஏற்றப்பட்டது என்று புரிந்துகொள்ள நாம் மேற்கத்திய நாகரீகத்தின் ஆரம்பப்புள்ளிக்கு செல்லவேண்டும். மேற்கத்திய நாகரீகம் கிரேக்க ரோமானிய காலங்களில் துவங்கியது. ரோமானிய சாம்ராஜ்யம் ஐரோப்பா முழுவதும் விரிவடைந்தது. அப்படி விரிவடைய காரணம் அவர்களிடம் இருந்த போர், கட்டுமானம், சட்ட அமைப்பு போன்ற தொழில்நுட்பங்கள். இந்த தொழில்நுட்பங்களை அவர்கள் கைப்பற்றிய ஐரோப்பிய இனங்களுக்கு கொடுத்தனர். அந்த இனங்களில் முக்கியமான ஐந்து இனங்கள் Huns,Franks, Vandals, Saxons, Visigoths. இவர்களை ஆள்வதற்கு ரோமானியர்கள் சொன்ன காரணம், "இவர்கள் காட்டுமிராண்டிகள். வாழத் தெரியாதவர்கள். இவர்களை நாம்தான் முன்னேற்ற வேண்டும். நாகரீகம் கொடுக்க வேண்டும்".
இப்படி போர்கருவிகள் முதல் கட்டுமானம் கலை வரை எல்லா விஷயங்களையும் ரோமானியர்களிடம் இருந்து இந்த ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் கற்றனர். ஆனால் ரோம் இவர்களை அளவுக்கதிகமாக சுரண்டியது. இதனால் இவர்கள் ரோமானிய அதிகாரத்தை எதிர்க்கத் துவங்கினர். ரோமானிய சாம்ராஜ்யம் உள்பூசல்கள், கொடுங்கோல் ஆட்சியாளர்கள் என்று பல காரணங்களால் ஆட்டம் கண்டது. அதே நேரத்தில் இந்த ஐரோப்பிய இனங்கள் ரோமானிய சாம்ராஜ்ஜியத்தை தாக்கத் துவங்கின. உள்ளே பலவீனம், வெளியே தாக்குதல் என்று ரோமானிய சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடைந்தது. மேற்கத்திய சரித்திரத்தில் அடுத்த அத்தியாயம் துவங்கியது. காட்டுமிராண்டிகள் என்று ரோமானியர்களால் அழைக்கப்பட்ட இந்த இனங்கள் தங்கள் சாம்ராஜ்யங்களை உருவக்கிக் கொண்டன. அவைதான் ஐரோப்பிய அரசுகளான பிரிட்டிஷ், ஜெர்மனி, டச்சு, பிரெஞ்சு போன்ற சாம்ராஜ்யங்கள். இதன்பிறகு இவர்களுக்கு இடையிலும் பல சண்டைகள் நடந்து, Black Death என்று அழைக்கப்பட்ட கொள்ளை நோய் வந்து இருண்ட காலத்துக்குள் சென்றன ஐரோப்பிய நாடுகள். இது ஒருவழியாக முடிந்து, புத்தெழுச்சி காலம் துவங்கியது. இந்த புத்தெழுச்சிக்கு இவர்கள் ரோமானிய புத்தெழுச்சி Roman Renaissance என்று பெயரிட்டனர்.