நாங்கள் இருவரும் ஒரு ஆண்டுகாலம் லிவிங்-டு-கெதரில் வாழ்ந்தோம் - சுஷாந்த் சிங் காதலி ரியா.!

நாங்கள் இருவரும் ஒரு ஆண்டுகாலம் லிவிங்-டு-கெதரில் வாழ்ந்தோம் - சுஷாந்த் சிங் காதலி ரியா.!

Update: 2020-07-31 07:47 GMT

உயிரிழந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை பிரச்சனை சென்ற சில நாள்களாக மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே சுஷாந்தின் தந்தை தன் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரவர்த்தி மீது பாட்னா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ரியாவும் மற்றும் அவருடைய குடும்பத்தாரும் சேர்ந்து தான் சுஷாந்தை ஏமாற்றி விட்டதாகவும், தற்கொலைக்கு தூண்டியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.


ரியா தன் மீது அளிக்கப்பட்ட புகாரை பாட்னாவில் இருந்து மும்பைக்கு மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளார். நானும் சுஷாந்தும் கடந்த இரு ஆண்டுகளாக லிவிங்-டுகெதரில் ஜூன் எட்டாம் தேதி வரை வாழ்ந்து வந்தோம். அதன்பிறகு அவருடைய வீட்டில் இருந்து வந்து விட்டேன். சுஷாந்த் மிகவும் மன உளைச்சலில் இருந்ததாகவும், மனுவில் ரியா குறிப்பிட்டு உள்ளார் என கூறப்படுகிறது. மேலும், தன்னை துக்கத்தில் ஆழ்த்தவே சுஷாந்தின் தந்தை இந்த மாதிரி ஒரு புகாரை கொடுத்துள்ளார் என ரியா குற்றம்சாட்டி உள்ளார்.


இதனிடையே சென்ற வாரம்தான் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடையாக நடித்த படமான "தில் பேச்சரா" ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் சாதனையைப் படைத்துள்ளது. இதனால் சுஷாந்தின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால், தொடர்ந்து சுஷாந்த் சிங் தற்கொலை பற்றிய விவகாரம் வெளியாகுவதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

Similar News