இந்து கடவுள்களை பற்றி இழிவாகப் பேசிய ஆபாசப்பட இயக்குனர் - வேலு பிரபாகரன் அதிரடி கைது.!

இந்து கடவுள்களை பற்றி இழிவாகப் பேசிய ஆபாசப்பட இயக்குனர் - வேலு பிரபாகரன் அதிரடி கைது.!

Update: 2020-07-31 06:04 GMT

இந்து கடவுளைப் பற்றி இழிவாகப் பேசிய ஆபாசப்பட இயக்குனர் வேலுபிரபாகரனை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இயக்குனர் வேலுபிரபாகரன் அனைத்து சமயத்திலும் ஆபாச காட்சிகளை முன் வைத்துதான் படங்களை இயக்கி வருகிறார். இவரைப்பற்றிய சொல்லப்போனால் படத்தின் கதையை நம்பாமல் உடல்களை நம்பிதான் படம் இயக்கி வருகிறார். இதனால் அவரை ஒரு இயக்குனர் என்று சொல்லிக்கொண்டு சினிமாத் திரை உலகில் சுற்றி வருகிறார்.

பின்பு ஈ.வெ.ரா கொள்கையை பின்பற்றி வருவதை காண்பித்து கொள்வார். மேலும், இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், மத நம்பிக்கையும் எப்பொழுதும் இழிவு படுத்திப் பேசுவார்.

எப்போது சமயம் கிடைக்கிறதோ அப்போது எல்லாம் இந்து மதத்தை குறித்து இழிவாகப் பேசிவர். தற்போது கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி பேசிய யுட்டிப் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்தருக்கு ஆதரவு தெரிவித்தும், இந்து மதத்தையும் கொச்சைப்படுத்தி பேசியும் பேட்டியளித்துள்ளார். இதனால் வேலு பிரபாகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இதனை பற்றி இந்து மக்கள் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவர் மகேஷ், சென்னை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் யூடியூப் சேனலில் கொடுத்த பேட்டியில் வேலு பிரபாகரன் இந்துக்களைப் பற்றியும், இந்து மதத்தைப் பற்றியும், இழிவாகப் பேசியிருக்கிறார். கருப்பர் கூட்டத்திற்கும் ஆதரவாகவும் பேசியுள்ளார். இதனால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மனுவை விசாரிக்க கமிஷனர் த்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் இயக்குனர் வேலு பிரபாகரனை கைது செய்துள்ளனர் 

Similar News