சென்னையில் இன்றும், நாளையும் வங்கிகள் செயல்படும்.! #Covid19 #chennai #lockdown

சென்னையில் இன்றும், நாளையும் வங்கிகள் செயல்படும்.! #Covid19 #chennai #lockdown

Update: 2020-06-29 02:56 GMT

சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 19-ந் தேதி முதல் 30-ம் தேதி (நாளை) வரை 12 நாட்கள் முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து வேறு எந்த பணி களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பொதுமக்கள் கூடு வதை தவிர்க்கும் வகையில் வங்கி சேவைக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது.

இந்த நிலையில் 33 சதவீத பணியாளர்களோடு 29-ந்தேதி (இன்று) மற்றும் 30-ந் தேதி (நாளை) ஆகிய நாட்களில் மட்டும் வங்கிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என்று அரசு அறி வித்து இருந்தது

இதன்படி இன்றும், நாளையும் வங்கிகள் குறைவான பணி யாளர்களோடு செயல்பட உள்ளன. 10 நாட்களுக்கு பின்னர் வங்கிகள் திறக்கப்பட உள்ளதால், பல்வேறு பரிவர்த்தணை களுக்காக பொதுமக்கள் படையெடுப்பார்கள் என்று தெரிகிறது. இதை எதிர்கொள்ள வங்கி நிர்வாகங்களும் தயாராகி வருகின்றன.

Similar News