தி.மு.க வின் புதிய அத்தியாயம் - "இந்து மத எதிரியல்ல நாங்கள்".! #DMK #MKStalin #Hindhu
தி.மு.க வின் புதிய அத்தியாயம் - "இந்து மத எதிரியல்ல நாங்கள்".! #DMK #MKStalin #Hindhu
தி.மு.க வின் அடுத்த மிகப்பெரிய குறி என்பது இந்து'க்களின் வாக்கு வங்கி. அதனை குறி வைத்தே அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி வருகிறது. இன்று பா.திருமாவேலன் எழுதிய கட்டுரை ஒன்றை அறிவாலயத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் பகிர்ந்துள்ளது.
அதில் மு.கருணாநிதி முதல்வராக இருந்த பொழுது அறநிலைய துறை அமைத்தார் எனவும், அவர் ஆட்சியில் செய்த கோவில் குடமுழுக்குகளையும், கோவில் திருப்பணிகளையும் பட்டியலிட்டு இந்துக்களின் எதிரியல்ல தி.மு.க என நீண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.
தி.மு.கவிற்கு இந்து சமுதாய மக்களின் சார்பாக சில கேள்விகள்.
* இந்துக்களின் எதிரியல்ல என கூறும் தி.மு.க இந்துக்களின் உணர்வுகளை எந்த அளவிற்கு மதித்தது என்று கூறமுடியுமா? இஸ்லமிய, கிறுஸ்திவ பண்டிகைகளை தன் பண்டிகை போல் நினைத்து கொண்டாடும் திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஒரு இந்து கோவிலின் முன் நின்று அர்ச்சகர்கள் வைக்கும் விபூதியை அழிக்க காரணம் என்ன? விபூதி என்பது இந்து மத அடையாளத்தின் அடிநாதம் என அறியாத தி.மு.க இப்பொழுது இந்து மத நட்பு பாராட்டுகிறது.
* வழிபாட்டு தலங்கள் என்பது இந்து மதத்தின் சாரம்சம், ஒவ்வோர் இந்துவும் அவன் வணங்கும் ஆலயங்களின் முன் "அதை கடவுள் இல்லை" என முழக்கமிட்ட ஈ.வே.ராவின் சிலை இருப்பதை தி.மு.க ஊக்குவிக்கிறதா? அன்று கருச்சட்டைகாரர்களின் ஓட்டிற்காக ஈ.வே.ரா சிலை வைத்து இன்று காவி சட்டைகாரர்கள் விழிப்புணர்வு ஏற்பட்ட உடன் இந்து மத எதிரியல்ல என பம்முகிறதா?
* திருப்பதி ஏழுமலையானின் பெருமையை கனிமொழி இழிந்து பேசும் போது அவரை "அவ்வாறு பேசாதே தவறு, நாம் இந்து மத எதிரியல்ல" என கண்டிக்க இயலாமல் இப்பொழுது நீலி கண்ணீர் வடிக்கிறது தி.மு.க.