இறைவனே எல்லாம்.. கடவுளை அடைய குருநானக் காட்டும் மார்க்கம்..
இறைவனே எல்லாம்.. கடவுளை அடைய குருநானக் காட்டும் மார்க்கம்..;

குரு நானக் தோற்றுவித்த சீக்கிய மார்க்கத்தில் ஏக இறைத்துவம் ஆழமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏக இறைத்துவத்தோடு இறைவன் இல்லாத இடம் என்று எதுவுமே இல்லை ஏன்ற நிலையும் வலியுறுத்தப்படுகிறது.
குரு நானக் இன்றைய பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே கவிபாடும் ஆற்றல்களை பெற்ற இவர், ஆன்மீக நூல்களை எழுதியும், மற்றும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய ஞானியாகவும் விளங்கினார். இந்து மற்றும் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு இடையேயான பிரிவினைகளை கடந்து இரண்டிற்குபொதுவான கோட்பாடுகளை முன்வைத்தார். இவர் காலத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒரே அளவில் இவர் மார்க்கத்தை ஏற்று கொண்டனர்.
குரு நானக் ஒரு முறை மெக்கா சென்றபோது காபா வின் திசையில் கால்களை நீட்டி படுத்திருந்த்தாகவும் சிலர் அவரை எழுப்பி கால்களை வேறு திசையில் வைக்குமாறு சொன்ன போது உங்கள் இறைவன் இல்லாத ஒரு திசையை காண்பியுங்கள் அங்கு என் கால்களை வைத்து கொள்கிறேன் என்று சொன்னதாக வரலாற்று தகல்வல்கள் சொல்கிறது.
சீக்கிய மார்க்கத்தின் வழிமுறை மிக மிக எளிமையானது. நம் அன்றாட வாழ்வில் முழுமையாக ஈடுபட்டுக்கொண்டே "இறைவனின் நாமத்தை "இடைவிடாது உச்சரிக்க வேண்டும். இந்த பெயர் உச்சரிப்பு என்பது ஒன்றே சீக்கிய மார்க்கதை பொருத்தவரை தியானம், யோகம், தத்துவம், ஞானம் எல்லாமுமே.
சீக்கிய மார்க்கத்தின் சமூக பார்வை மிக அற்புதமான ஒன்று. எந்த வகையான ஏற்ற தாழ்வுகளையும் சீக்கிய மார்க்கம் அனுமதிப்பதில்லை. இறைவன் தானே எல்லாமாகவும் இருக்கிறான் என்பது குருநானக்கின் அசைக்க முடியா நம்பிக்கை. அதை அவர் உணர்ந்தவரும் கூட. சீக்கிய மதம் பத்து குருமார்களின் உபதேசங்களை உள்ளடக்கியது. கடைசி குருவான குரு கோபிந்த் சிங்கிற்கு பிறகு அவர்களது புனித நூலான "கிரந்த் சாகிப் "பையே குருவாக கருதுகின்றனர். சீக் என்கிற வார்த்தை சிஷ்யன் அல்லது மாணவன் என்று பொருளிலிருந்து வந்தகும்.