ஆப்கானிஸ்தானில் இருந்து மேலும் 700 சீக்கியர்கள் இந்தியாவில் விரைவில் தஞ்சம்.!
சீக்கிய குடும்பங்களின் முதல் குழு டெல்லியில் உள்ள ஒரு குருத்வாராவில் தற்போது வசித்து வருகின்றனர்.
இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையின ஹிந்துக்களும் சீக்கியர்களும் இதர பிற வகுப்பினர்களும் கொடுமைப்படுத்தப்பட்டும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டும், கட்டாய மதமாற்ற சிக்கல்களும், பெண்கள், சிறுமிகள் கடத்திச் செல்லப்பட்டு இஸ்லாமுக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதும் வழக்கமாக நடைபெற்று வருகின்றன.
இந்தியாவில் தோன்றிய மதங்களை பின்பற்றும் இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் புத்தமதத்தை பின்பற்றுவதால் மதக்கொடுமைக்கு ஆளாகி வரும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை கொடுத்து அடைக்கலம் தரும் விதமாக இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடந்த டிசம்பரில் மத்திய அரசு கொண்டு வந்தது.
அங்கே இவர்களை இன்னல் படுத்தும் பெரும்பான்மையான முஸ்லிம் சமூகத்திற்கும் இதே முன்னுரிமை தரப்பட வேண்டும் என்று இங்கு இடதுசாரி கட்சிகளும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் போராடி வருகின்றன. இதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆப்கானிஸ்தானில் பல கொடுமைகளுக்கு உள்ளாகும் சீக்கிய மற்றும் இந்துக் குடும்பங்களை இந்தியாவிற்கு அழைத்து வந்து, தங்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கடந்த வாரம் 11 சீக்கியர்கள் கொண்ட முதல் குழு வந்து சேர்ந்தது. அந்த முதல் குழு பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்களால் விமானநிலையத்தில் அன்புடன் வரவேற்கப்பட்டது. இப்போது ஆப்கானிஸ்தானில் மிச்சமிருக்கும் 700 சீக்கியர்களையும் இந்தியாவிற்கு கொண்டு வர இந்திய அரசு தயாராக இருக்கிறது.
சீக்கிய குடும்பங்களின் முதல் குழு டெல்லியில் உள்ள ஒரு குருத்வாராவில் தற்போது வசித்து வருகின்றனர். டெல்லி சீக்கிய குருத்வாரா பிரபந்தக் கமிட்டி அவர்கள் தங்கும் ஏற்பாடுகளை கவனித்து வருகிறது.