'சீனப் பன்றிகள்' என்று சீனாவில் இருந்து கொண்டே திட்டிய இந்திய மாணவர் - சீன சமூகவலைதளங்களில் பரபரப்பு.! #IndianStudent #China #weibo
'சீனப் பன்றிகள்' என்று சீனாவில் இருந்து கொண்டே திட்டிய இந்திய மாணவர் - சீன சமூகவலைதளங்களில் பரபரப்பு.! #IndianStudent #China #weibo
சீன அரசு மீடியா குளோபல் டைம்ஸ் 'கடுகசேரி' என்ற ஒரு இந்திய மாணவர், சீனர்கள் மீது மோசமான கருத்துக்களை தெரிவித்த பின்னர் மன்னிப்பு கோரியதாகக் கூறியுள்ளது. அவர் படித்த கிழக்கு சீனாவின் ஜியாங்சுவில் உள்ள ஜியாங்சு பல்கலைக்கழகம் (JSU) அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக அச்சுறுத்தியதாக அரசு ஊடகங்கள் கூறியுள்ளன. அந்த செய்தியின் படி, அந்த மாணவர் டிக் டாக் போன்ற சீனாவின் ஒரு சமூக வலை தளத்தில் சீனர்களை 'சின்க்ஸ்' 'சீன பன்றிகள்' மற்றும் 'D***head ' என்று வசை பாடியதாகவும் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து சீன ட்விட்டரான வெய்போவில் சீன மக்கள் இதைப் பகிர்ந்து, அவரை உடனடியாக நாட்டை விட்டுத் துரத்தக் கோரியதாகவும் குளோபல் டைம்ஸ் கூறுகிறது.
கடுகாசேரி உண்மையில் JSUவின் மாணவர் என்பதை நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. முன்னதாக அவர் "சிறந்த 10 இளைஞர் விருதுக்கு போட்டியாளர்" என்று நம்பப்பட்டது, ஆனால் 'சர்ச்சைக்கு' பின்னர், அவர் இனி அதற்கான தகுதியைப் பெற மாட்டார். மேலும் விசாரணையின் பின்னர் வெளிநாட்டு மாணவர்கள் மீதான விதிமுறைகளின்படி பல்கலைக்கழகம் "தவறுகளுக்கு" "கடுகஸேரியை தண்டிக்கும்" என்று வு என்ற ஒரு ஜியாங்சு பல்கலைக்கழக ஊழியரை குளோபல் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது.
வெய்போவில் எழுத்துப்பூர்வ அறிக்கையின் மூலம் இந்திய மாணவர் தனது செயல்களுக்காக மன்னிப்பு கோரியதாகவும், சீன மக்களின் உணர்வுகளை புண்படுத்துவது தனது நோக்கம் அல்ல என்றும், தனது 'வெறுக்கத்தக்க கருத்துக்கள்' மற்றும் அது பல்கலைக்கழகத்தின் நற்பெயரை எவ்வாறு பாதித்தது என்பதில் 'வருத்தம் தெரிவித்தார்'. "எனது நடவடிக்கைகள் தற்செயலாகவும், ஒரு வேகத்துடனும் இருந்தன. இது போன்ற விஷயங்கள் மீண்டும் நடக்காது என்று நான் உறுதியளிக்கிறேன், " எனது தெரிவித்ததாக சீன அரசு ஊடகங்கள் கூறுகின்றன.