கேரளா மற்றும் கர்நாடகாவில் கணிசமான ISIS பயங்கரவாதிகள் உள்ளனர் : பயங்கரவாதம் தொடர்பான ஐ.நாவின் பகீர் அறிக்கை.! #ISIS #UN
கேரளா மற்றும் கர்நாடகாவில் கணிசமான ISIS பயங்கரவாதிகள் உள்ளனர் : பயங்கரவாதம் தொடர்பான ஐ.நாவின் பகீர் அறிக்கை.! #ISIS #UN
பயங்கரவாதம் தொடர்பான ஐக்கிய நாடுகள் (UN) சபையின் அறிக்கை, இந்திய மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவில் கணிசமான எண்ணிக்கையிலான ISIS பயங்கரவாதிகள் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. ISIS தொடர்பான பகுப்பாய்வு ஆதரவு மற்றும் பொருளாதாரத் தடைக் கண்காணிப்புக் குழுவின் 26 வது அறிக்கையின்படி, ISISன் இந்திய இணை அமைப்பாக அறிவிக்கப்பட்ட ISNL ல் (ஹிந்த் விலாயா) சுமார் 180 முதல் 200 உறுப்பினர்கள் உள்ளதாக மே 10, 2019 அன்று அறிவிக்கப்பட்டது.
நிம்ருஸ், ஹெல்மண்ட் மற்றும் காந்தஹார் மாகாணங்களில் இருந்து தலிபானின் கீழ் இயங்கும் பயங்கரவாத குழு அல்-கைதாவின் இந்திய கிளை AQISல் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளை சேர்ந்த 150-200 தீவிர பயங்கரவாதிகள் இருப்பதாகவும், இந்தப் பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளது எனவும் அதன் முன்னாள் தலைவரின் மரணத்திற்கு பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ISIS தனது அமக் செய்தி நிறுவனம் மூலம் இந்தியாவில் ஒரு புதிய "மாகாணத்தை" உருவாக்கியுள்ளதாகக் கூறியது. ஜம்மு-காஷ்மீரின் வடக்கு மாநிலத்திற்குள் அமைந்துள்ள ஒரு பகுதியை ISIS, "ஹிந்தின் விலாயா" அல்லது ஹிந்த் மாகாணம் என்று அழைத்தது. காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையிலான மோதல்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
காஷ்மீரில் செயல்பட்டு வரும் ISIS பயங்கரவாதிகள், அதன் கோராசான் மாகாண கிளை "ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் அருகிலுள்ள நிலங்களை" உள்ளடக்கும் வகையில் 2015 இல் நிறுவப்பட்டது.