நாகூரில் மறைந்துள்ள சித்தர் பீடத்தை மீட்டெடுத்த தன்னார்வலர்கள்.! #Nagoore #Nagapptinum #Spirituality
நாகூரில் மறைந்துள்ள சித்தர் பீடத்தை மீட்டெடுத்த தன்னார்வலர்கள்.! #Nagoore #Nagapptinum #Spirituality
சிவ ரகசியத்தை அறிந்தவர்கள் சித்தர்கள் மட்டுமே. இப்பூவுலகில் மனித பிறிவிகளாக பிறப்பெடுத்து சிவ சிந்தனையில் ஈடுபாடு கொண்டு, சிவ ரகசியத்தியத்தை தெரிந்து கொண்டு மனித பிறவியை சிவ ரகசியத்தின் மூலம் வென்றெடுத்து பல அதியசய செயல்களை செய்து தன்னுயிரை ஜீவ ஒளியாக்கி இன்றும் மக்களுக்கு ரூபம் இன்றி சக்தியாய் அருள் தரும் சித்தர்கள் ஏராளம்.
இன்று சித்தர்கள் என்றால் 18 பேர் மட்டுமே என தெரிந்த உண்மை ஆனால் சித்தர்கள் எண்ணிக்கை அவற்றிலும் அதிகம். அவ்வகையில் நாகப்பட்டினம் அடுத்த நாகூரில் ஸ்ரீ காங்கேய சித்தரின் ஜீவ பீடம் அமைந்துள்ளது. கவனிப்பாரற்று கிடந்த இந்த ஜீவ பீடத்தினை கண்டறிந்து அதனை சுத்தப்படுத்தி, மீண்டும் பூஜைகளை துவக்கியுள்ளனர் நாகப்பட்டினத்தை சேர்ந்த ஸ்ரீ அறுபடை தர்மசிந்தனை அறக்கட்டளை குழுவினர்.
இந்த ஜீவ பீடமானது எப்படி? அதன் வரலாறு என்ன என்று ஸ்ரீ தர்மசிந்தனை அறக்கட்டளை நிறுவனர் திரு.சரவணன் அவர்கள் கூறும் போது "நாகூரில் ஜீவ சமாதியான இந்த ஸ்ரீ காங்கேய சித்தர் கி.பி 14'ம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவர் என்றும் இவர் 'உரிச்சொல் நிகண்டு' கூறும் 'நிகண்டு' நூலை இயற்றினார் என்பதும் தெரிய வந்துள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தில் இவரது சிலை வழிபாடு உள்ளதாகவும் தகவல். இவரை பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் கூறும் போது 'இந்த ஸ்ரீ காங்கேய சித்தர் என்பவர் கோடியக்கரை அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் ஜீவ சமாதி அடைந்துள்ளார்' எனவும் தெரிவிக்கின்றனர்.
அவர்களின் இந்த கூற்றுப்படி இவரது சமாதியானது அமைந்துள்ளது. மேலும் இவரை பற்றிய தகவல்களை ஆராய்ந்து வருகிறோம். இந்த ஜீவ சமாதியானது 400 வருடங்கள் முற்பட்டது, ஒன்பது சாதுக்கள் இங்கு தங்கி பூஜை செய்து, காவடி எடுத்து அவற்றின் மூலம் மக்களிடம் அரிசி முதலிய பொருள்கள் யாசகம் பெற்று பூஜை செய்து வந்துள்ளனர். அவர்கள் காலத்திற்கு பிறகு இந்த ஜீவசமாதியானது சரிவர பராமரிக்கபடாமல் பூஜைகள் இன்றி பாழடைந்து வத்துள்ளது.