சிறப்புக்கட்டுரை : தென்னிந்தியாவை சேர்ந்த முதல் பிரதமர் நரசிம்ம ராவை இறப்பிலும் அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சி.! #NarasimhaRao
சிறப்புக்கட்டுரை : தென்னிந்தியாவை சேர்ந்த முதல் பிரதமர் நரசிம்ம ராவை இறப்பிலும் அவமானப்படுத்திய காங்கிரஸ் கட்சி.! #NarasimhaRao
'காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த சிறந்த பிரதமர்' என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் P.V .நரசிம்ம ராவ், தென்னிந்தியாவை சேர்ந்த முதல் பிரதமர், நவீன இந்தியாவின் சிற்பி எனப் பல பட்டங்களுக்கு சொந்தக்காரர்.
ஆனால் நேரு குடும்பத்தில் இருந்து வராத பிரதமர் என்ற காரணத்தினால்
அவரை சோனியா காந்தியும் அவர் குடும்பமும் சிறிதும் மதிக்கவில்லை. எந்தளவு மதிக்கவில்லை என்றால் டெல்லியில் இருந்த AICC (அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி) வளாகத்திற்குள் அவர் இறந்த சடலத்தைக் கூட நுழைய விடாத அளவிற்கு கீழ்த்தரமாக நடந்து கொண்டனர்.
அவர் சடலம், வாசலுக்கு வெளியே வண்டியில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் கடைசி வரை கேட் திறக்கப்படவே இல்லை. முன்னாள் பிரதமர் ஆக அவர் இருந்த போதும், அவருக்கு அரசு இறுதிச் சடங்கும் இல்லை. ஒப்பீடு வைத்துப் பார்த்தால், ஆறு மாதம் மட்டுமே அமேதியின் எம்.பி யாக இருந்தவரும், அவசர நிலைக் காலத்தில் மக்களுக்கு கட்டாயக் கருத்தடை செய்தவருமான சஞ்சய் காந்திக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு கிடைத்தது மேலும் டெல்லியில் ஒரு சமாதியும் இருக்கிறது.
ராவ் 23 டிசம்பர், 2004 அன்று காலமானார். டிசம்பர் 27, 2004 அன்று, இந்திய கல்வியாளரும் கட்டுரையாளருமான நாலபத் இவ்வாறு எழுதினார்
"உண்மையில், முன்னாள் AICC தலைவராகவும், பிரதமராகவும் இருந்தபோதிலும், நேரு வம்சத்தின் தற்போதைய வாரிசு 1998 ல் கட்சியின் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாளில் இருந்து, நரசிம்மராவ் காங்கிரஸ் செயற்குழுவில் இருந்து மட்டும் விலக்கப்படவில்லை,ஏராளமான 'சிறப்பு அழைப்பாளர்களில்" ஒருவராக ஆவதற்கு கூட அவர் அனுமதிக்கப்படவில்லை. அவர்களில் பெரும்பாலோர் வேறு எந்த பங்களிப்பையும் விட அவர்களின் ஜால்ரா திறனுக்காக தேர்வு செய்யப்படுகிறார்கள்"