அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன?
அன்றாடம் நாம் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன?
அன்றாட வாழ்வின் பிரச்சனைகள்:
• நம் வேலையை தள்ளி போடுதல். கொடுக்கப்பட்ட நேரத்திற்க்குள் அதை செய்து முடிக்காமல் அழுத்தங்களுக்கு ஆட்படுதல், இதனால் பிடித்த வேலைக்கூட பாரமானதாக நமக்கு தெரிகிறது இல்லையா?
• உணவை மட்டும் தவறாமல் உண்டுவிட்டு, உடற்பயிற்சிக்கு செய்வதற்க்கு காரணம் தேடுவது. இதனால் நமக்கு கிடைக்கும் பிரதிபலன் ஆரோக்கிய கேடு மட்டுமே
• பொருளாதார முடிவுகளை, திட்டங்களை கிடப்பில் போடுவது. இது சூழலை மிகவும் சிக்கலானதாகவே மாற்றும்
• உறவு சிக்கல்களை சீராக்காமல் தள்ளி போடுவது. உறவுகளுக்குள் எழும் சர்ச்சை பேச்சுக்கும் விவாதத்திற்க்கும் அஞ்சி அதை கையாளாமல் விடுவதால் ஏற்படும் விரிசல்களை சமாளிப்பது.
• கவனச்சிதைவு, செயலற்றத்தன்மை, குற்ற உணர்வு, உளைச்சல், தனிமை என ஏராளமான இலவச இணைப்புகளை சுய ஒழுக்கத்தை தொலைப்பதால் பெறலாம்
இத்தனை பிரச்சனைகளை பல நாட்கள் அனுபவிப்பதற்க்கு மாறாக ஒரு நாளில் சில நிமிடங்களை சீராக ஒதுக்கி நம் அன்றாட பணிகளை, கடமைகளை, தேவைகளை தொடர்ந்து செய்வது எளிமையானது தானே?
சுய ஒழுக்க பணிகளை தொடர்ந்து செய்வதற்க்கான சில குறிப்புகள்
• எதற்காக செய்கிறீர்கள் என்பதை உணர்ந்து செய்யுஙக்ள். உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவா? உங்கள் இலக்கை அடையவா…? உங்கள் கனவை மெருகேற்றவா..? ஆம் எனில் அப்போது இந்த செயலும் அவசியமாகிறாது. இதை நீங்கள் செய்தே ஆகவேண்டும் என்ற உறுதி கொள்ளுங்கள்
• உங்களை சுற்றி பல நினைவூட்டலகளை தயார்படுத்தி வையுங்கள். சிறு குறிப்பை எழுதி உங்கள் கணினி அலமாரி என உங்கள் பார்வைபடும் இடத்திலெல்லாம் ஒட்டுங்கள். உங்கள் நண்பர்களை,, கணவரை/மனைவியை, குழந்தைகளை சகாக்களை அழைத்து நினைவூட்ட சொல்லுங்கள்