உதயநிதி அழிச்சாட்டியத்தால் கூண்டோடு கட்சித்தாவ தயாராகும் தி.மு.க மூத்த தலைவர்கள்? அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்!

உதயநிதி அழிச்சாட்டியத்தால் கூண்டோடு கட்சித்தாவ தயாராகும் தி.மு.க மூத்த தலைவர்கள்? அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்!

Update: 2020-08-06 03:20 GMT

தி.மு.க ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ கு.க.செல்வம் பா.ஜ.க-வில் ஐக்கியமாகி உள்ளார். தி.மு.க-வை எதிர்க்க துணிந்த அவர், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் அவர்களின் ஆதிக்கத்தால் அதிருப்தியில் வெளியேறினார் என்று கூறப்படுகிறது.

இத்தனை ஆண்டுகள் கட்சியில் இருந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு, நேற்று வந்த உதயநிதிக்கு தேவையானவர்கள் தி.மு.க உயர்பதவிகளில் அமர்த்தப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு உடன்பிறப்புகளால் வாசிக்கப்படுகிறது.

இந்நிலையில் மேலும் 16 எம்.எல்.ஏ-க்களும், 12 மாவட்ட செயலாளர்களும் தி.மு.க-வில் இருந்து கட்சித்தாவ தயாராக உள்ளனர் என தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த செய்தி குறிப்பு இவர்கள் அனைவரும் பா.ஜ.க-வில் ஐக்கியமாவார்கள் என சொல்லப்பட்டு இருக்கிறது.

தி.மு.க-வில் மு.க.ஸ்டாலின் காலம் முடிந்து விட்டது, இனி உதயநிதி தான் கட்சி என முடிவே ஆகி விட்டதால், இனி தங்களுக்கு எதிர்காலம் இல்லை என நினைப்பவர்கள் மற்ற கட்சிகளுக்கு தாவ தயாராக இருக்கின்றனர் என சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த அதிருப்தி செய்திகள் மு.க.ஸ்டாலின் செவிகளுக்கு எட்டப்படாமலே பார்த்துக் கொள்ளப்படுகிறதாம். இதனால், மு.க.ஸ்டாலின் மீது கொந்தளிப்பில் இருக்கின்றனராம் உடன்பிறப்புகள்.

Similar News