பாகிஸ்தான் இந்துக் கோவில் இடிப்பு - நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு?
பாகிஸ்தான் இந்துக் கோவில் இடிப்பு - நடவடிக்கை எடுக்கும் இந்திய அரசு?
பாகிஸ்தானின் கைபர் பத்துக்வாவின் கராக் மாவட்டத்தில் அண்மையில் ஒரு ஹிந்து கோவில் 1500 பேர் கொண்ட கும்பலால் சூறையாடி அழிக்கப்பட்டது. இது சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தற்போது, இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசு பாகிஸ்தானிடம் முறையான எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ANI செய்திகள் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த விவகாரம் பாகிஸ்தானிடம் அதிகாரபூர்வமாக இந்தியா எடுத்துச் சென்றது என்றும், இந்த வன்முறைக்கு எதிராக ஒரு வலுவான எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டது என்றும் கூறப்படுகிறது .
India has lodged a formal protest with Pakistan via diplomatic channels against vandalisation of a Hindu temple there: Sources
— ANI (@ANI) January 1, 2021
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான கராக் நகரில் உள்ள தெரி கிராமத்தில் உள்ள கிருஷ்ண துவாரா கோவிலுடன், ஸ்ரீ பரமன் ஜி மகாராஜின் சமாதி புதன்கிழமை 1500 பேர் கொண்ட இஸ்லாமியவாத கும்பலால் அழிக்கப்பட்டது.
இந்த கோவில் கூடுதல் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக இந்த கும்பல் குற்றம்சாட்டியது. இச்செய்தி சமூகவலைதளங்களில் பரவி பாகிஸ்தானுக்கு கடும் அவப்பெயரை ஏற்படுத்தி தந்தது. இதற்கு பிறகு இந்த தாக்குதல் தொடர்பாக டஜன் கணக்கான நபர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த கோயில் மீதான தாக்குதலில் சுமார் 1500 பேர் பங்கேற்றனர் .
தெரி கிராமத்தின் இந்த ஹிந்து கோவில் மீதான தாக்குதல் குறித்து பாகிஸ்தானின் தலைமை நீதிபதி குல்சார் அஹமது வியாழக்கிழமை தானாகவே இந்த வழக்கை முன்னெடுத்து எடுத்துக் கொண்டதை அடுத்து இந்த கைதுகள் ஏற்பட்டுள்ளன. வியாழக்கிழமை கராச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ரமேஷ் குமார் என்பவர் இந்த கோயில் சூறையாடப்பட்டது குறித்து புகார் அளித்தார். இதற்குப் பிறகு தலைமை நீதிபதி இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஜனவரி 5ஆம் தேதி விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.