"இஸ்லாமிய நாட்டில் இந்துக் கோவில் கட்டுவது ஹராம்" -இஸ்லாமிய அடிப்படைவாதி ஜாகிர் நாயக் பேச்சு.! #ZakirNaik #HinduTemple #Islamabad
"இஸ்லாமிய நாட்டில் இந்துக் கோவில் கட்டுவது ஹராம்" -இஸ்லாமிய அடிப்படைவாதி ஜாகிர் நாயக் பேச்சு.! #ZakirNaik #HinduTemple #Islamabad
இஸ்லாமாபாத்தில் முதன் முதலாக இந்து கோவில் கட்டுவதற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இம்ரான் கான் அரசாங்கம் இத்திட்டத்திற்கு நிதியளிப்பதற்கான முடிவை பலமாக விமர்சித்தனர். இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய தீவிர இஸ்லாமியவாதி ஜாகிர் நாயக், இஸ்லாமாபாத்தில் ஒரு கோயில் கட்ட அனுமதித்ததற்காக பாகிஸ்தான் அரசாங்கத்திடம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், இஸ்லாமிய தேசம் ஒரு முஸ்லீம் அல்லாதவரின் வழிபாட்டு மையத்திற்கு பணம் செலுத்தவோ அல்லது நன்கொடை வழங்கவோ ஷரியா (இஸ்லாமிய சட்டம்) படி ஹராம் (தடைசெய்யப்பட்டுள்ளது). அது ஒரு கோவிலாக இருந்தாலும் சரி அல்லது ஒரு தேவாலயம் ஆனாலும் சரி. எனவே இம்ரான் கான் அரசாங்கம் ஒரு பாவம் செய்ததாக நாயக் கூறினார்,
தனது இஸ்லாமிய யூடியூப் சேனலான 'பிலிவிங் பீயிங்ஸ்' (Believing Beings) ஒரு நேரடி அமர்வில் பேசிய அவர், அனைத்து முஸ்லீம் அறிஞர்கள், இமாம்கள் மற்றும் உலேமாக்கள் தங்கள் கருத்துக்களில் ஒற்றுமையாக நிற்கிறார்கள், "முஸ்லீம் அல்லாதவர்களின் வழிபாட்டு மையத்திற்கு, ஒரு முஸ்லிம் நன்கொடை அளிக்கவோ, ஆதரிக்கவோ அல்லது கட்டமைக்கவோ முடியாது", மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோவிலுக்கு நிதியளிக்க முஸ்லிம் வரி செலுத்துவோரின் பணத்தை பயன்படுத்துவதன் மூலம், பாகிஸ்தான் ஷிர்க் (பாவம்) செய்து வருகிறது.
"ஒரு முஸ்லீம் அல்லாதவரின் வழிபாட்டு இல்லத்தை ஒரு முஸ்லீம் நன்கொடையாகவோ, கட்டவோ அல்லது ஆதரிக்கவோ முடியாத பல ஃபத்வாக்கள் (தீர்ப்புகள்) உள்ளன. பல ஆண்டுகளாக, அறிஞர்கள் இதைப் பராமரித்து வருகின்றனர், "என்று நாயக் தனது வாராந்திர நிகழ்ச்சியில் தம்மைப் பின்பற்றுபவர்களும், மற்றவர்களும் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார்.
முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலத்தைக் கட்டியெழுப்ப எந்த முஸ்லீமும் இணைந்தால், அவர் ஒரு பாவத்தைச் செய்கிறார் எனக் குரானில் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகிறார்.