இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பகவத் கீதையை பெருமைப்படுத்திய பெண் எம்.பி!

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர் பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

Update: 2024-07-12 17:44 GMT

இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை வீழ்த்தி தொழிலாளர் கட்சி அபார வெற்றி பெற்றது. தொழிலாளர் கட்சி தலைவர் கீர் ஸ்டார்மர் புதிய பிரதமராக பதவியேற்றார். இந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 28 பேர் வெற்றி வாகை சூடினார்கள். லீ செஸ்டர்  கிழக்கு தொகுதியில் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண் ஷிவானி ராஜா என்பவர் வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட தொழிலாளர் கட்சி வேட்பாளர் ராஜசேகர்வால் தோல்வியடைந்தார். இவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் தான். 1987 ஆம் ஆண்டு முதல் லீசெஸ்டர் கிழக்கு தொகுதி தொழிலாளர் கட்சியின் கோட்டையாக இருந்து வந்தது.37 ஆண்டுகளுக்குப் பிறகு இதனை தகர்த்து ஷிவானி ராஜா முதல் முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். தொழில் அதிபரான இவர் குஜராத்தைச் சேர்ந்தவர்.

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்பு விழா நடந்தது. அப்போது ஷிவானி ராஜா பகவத்கீதை மீது சத்தியம் செய்து பதவி ஏற்றுக்கொண்டார். இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் "பாராளுமன்றத்தில் எம்.பியாக பதவி ஏற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது". என்று தெரிவித்துள்ளார்.


SOURCE :News

Tags:    

Similar News