பிரதமர் மோடி உதவியால்தான் இலங்கை தப்பித்தது - நெகிழும் இலங்கை காங்கிரஸ் கட்சித் தலைவர் செந்தில் தொண்டைமான்

இந்திய பிரதமர் மோடியின் உதவியால்தான் இலங்கை பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வருகிறது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-30 06:08 GMT

இந்திய பிரதமர் மோடியின் உதவியால்தான் இலங்கை பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வருகிறது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சித் தலைவர் செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை அருகே மதகுபட்டியில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, 'இந்திய பிரதமர் மோடி செய்த நிதி உதவியாகத்தான் இலங்கை பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகிறது. மற்ற நாடுகள் உதவி செய்யாத போது இந்தியா செய்த உதவி பெறும் பேருதவியாக இருந்தது.

மேலும் சர்வதேச நிதி ஆணையத்துடன் இலங்கை நிதி உதவியை எதிர்பார்த்துள்ளது, உதவிகள் கிடைக்கும் பட்சத்தில் ஓரிரு ஆண்டுகளில் இலங்கை பழைய நிலைமை அடையும்' எனவும் கூறினார். மேலும் பிரதமர் மோடிக்கு இலங்கை கடமைப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


Source - The Tamil Hindu

Similar News