லிப்ஸ்டிக்கில் எழுதி தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனை நையப்புடைந்த திருடர்கள்! ஏன் தெரியுமா?

Update: 2021-04-15 06:30 GMT

"ஒரு நூறு ரூபாய் கூட வைக்க மாட்டியா?" - லிப்ஸ்டிக்கில் எழுதி தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனை கலாய்த்துவிட்டு சென்றுள்ளனர் துரைமுருகன் வீட்டில் திருடவந்த திருடர்கள்.

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு, திருப்பத்துார் மாவட்டம், ஏலகிரி மலை மஞ்சகொல்லையில், 25 ஏக்கரில், சொகுசு பங்களா உள்ளது. அதில் காவலாளி பிரேம்குமார் வசிக்கிறார். மேலும் ஓய்வு நேரங்களில் துரைமுருகன் வந்து செல்வார். கடந்த, கொரோனோ ஊரடங்கு காலத்தில் கூட துரைமுருகன் இங்குதான் ஓய்வில் இருந்தார். இரு தினங்கள் முன் இந்த பங்களா கதவை உடைத்து, மர்ம நபர்கள் உள்ளே புகுந்து திருட முயற்சித்துள்ளனர். இரண்டு பீரோக்களையும் உடைத்துள்ளனர். எதுவும் சிக்காததால், 'சிசிடிவி ஹார்டு டிஸ்க்'கை எடுத்துச் சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து, ஏலகிரிமலை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் திருட வந்த திருடர்கள் துரைமுருகனின் சொகுசு பங்களா சுவற்றில், 'ஒரு, 100 ரூபாய் கூட வைக்க மாட்டாயா' என லிப்ஸ்டிகினால் எழுதி வைத்துள்ளனர்.

அத்துடன், அங்குள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில், "ஒரு ரூபாய் கூட இல்ல; எடுக்கல" எனவும், '100 ரூபாய் கூட வைக்கலேன்னா, இவ்வளவு பெரிய பங்களா எதற்கு' எனவும், எழுதி வைத்து விட்டு சென்றது தெரிந்தது. மேலும், அவர்கள் ரம்மி விளையாடி, சீட்டு கட்டுகளை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News