கொரோனோ பயத்தினால் சென்னையை விட்டு கொடைக்கானல் சென்றுள்ளாரா ஸ்டாலின்?

Update: 2021-04-16 09:45 GMT

தி.மு.க இணைய உடன்பிறப்புகள் கடந்த வாரத்தில் இணையத்தில் பா.ஜ.க வேட்பாளர்கள் குஷ்பு, அண்ணாமலை, ஹெச்.ராஜா மற்றும் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் ஆகியோர் தேர்தல் பரபரப்பு முடிந்து தத்தம் வேலைகளில் ஈடுபட்டிருந்த புகைப்படத்தை பதிவிட்டு "பார்த்தீர்களா எங்கள் தி.மு.கதான் தேர்தல் முடிந்தும் மக்களுக்காக உழைக்கும் மற்றவர்கள் எல்லாம் வெறும் பேச்சு"தான் என்கிற ரீதியில் கமெண்ட்களை பதிவேற்றியிருந்தனர்.

இன்னும் சிலரோ "தி.மு.க இல்லையேல் தமிழகம் இல்லை" என்கிற தோணியில் பதிவிட்டிருந்தனர். ஆனால் அந்த தி.மு.க இணைய பரப்புரையாளர்களுக்கெல்லாம் பதில் கிடைக்கும் விதமாக இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றுள்ளார்.

இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்து பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் சென்றார். ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா, மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை மற்றும் பேரன் பேத்திகள் ஆகியோரும் வந்தனர். இவர்கள் அனைவரும் பாம்பார்புரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான பங்களாவில் 2 நாட்கள் ஓய்வெடுப்பார்கள் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஏன் ஸ்டாலின் வருகை குறித்து பெரும்பாலான கட்சி நிர்வாகிகளுக்கு தெரியவில்லை தெரியவில்லை எனவும் உடன்பிறப்புகளே புலம்ப துவங்கிவிட்டனர்.

Similar News