எதிர்கட்சி தலைவர் யார் இ.பி.எஸ்'ஸா? ஓ.பி.எஸ்'ஸா?

Update: 2021-05-04 04:15 GMT

தமிழகத்தில் 75 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள அ.தி.மு.க'வின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணி 159 இடங்களிலும், அ.தி.மு.க கூட்டணி 75 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தனிப்பெரும்பாண்மை பெற்றுள்ள தி.மு.க மே 7 ஆம் தேதி முதல் ஆட்சி அமைக்க உள்ளது. அதற்கான வேலைகள் இப்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சியாக அமரப்போகும் அ.தி.மு.க'வில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியா? அல்லது ஓ பன்னீர்செல்வமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிதான் இருப்பார் என அ.தி.மு.க தலைமை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது சம்மந்தமாக மே 6'ல் அ.தி.மு.க எம்.எல்.ஏ'க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அதில் அனைத்து எம்.எல்.ஏ'க்களும் கூடி தங்கள் சார்பாக ஒருமனதாக எதிர்கட்சி தலைவரை முடிவு செய்வார்கள் என்று தெரிகிறது.

Similar News