"இனி இந்த ஏரியா கழிப்பறை எல்லாம் எங்க கன்ரோல்ல்ல வரனும்" என துப்புரவு பணியாளரை அடித்து, உதைத்த தி.மு.க வட்ட செயலாளர்!

Update: 2021-05-06 08:15 GMT

சென்னை ராயபுரத்தில் துப்புரவு பணியாளரை தாக்கிய தி.மு.க வட்டச் செயலாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராயபுரம் பகுதிகுட்பட்ட மாநகராட்சி அலுவலகத்தில் லோகநாதன் என்பவர் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது அங்கு வந்த தி.மு.க வட்ட செயலாளர் புகழேந்தி துப்புரவு பணியாளர் லோகநாதனை வழிமறித்து "இனி இந்த ஏரியா'வில் உள்ள கழிப்பறை எல்லாம் எங்க கட்டுப்பாட்டில் வேணும்" என கேட்டு தகராறு செய்துள்ளார்.

மீறி வேலைக்கு செல்ல முயன்ற துப்புரவு பணியாளர் லோகநாதனை தி.மு.க வட்ட செயலாளர் புகழேந்தி தடுத்துள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்படவே உடனே துப்புரவு பணியாளரான லோகநாதனை சரமரியாக அடித்து உதைத்துள்ளனர் தி.மு.க வட்ட செயலாளர் புகழேந்தியின் ஆட்கள்.

இதனால் பாதிக்கப்பட்ட லோகநாதன் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து காவல் துறை விசாரித்து வருகிறது.

Source - தினத்தந்தி 

Similar News