ஸ்டாலின் பதவி ஏற்ற பொழுது கண்ணீர் வடித்த திருமதி.துர்கா ஸ்டாலின்!

Update: 2021-05-07 04:15 GMT

இன்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற சமயத்தில் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் எதிர் வரிசையில் அமர்ந்து கண்ணீர் வடித்தார்.

கடந்த மாதம் தமிழகத்திற்கு ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது, அதில் 156 இடங்களை கூட்டணி கட்சியினருடன் கைப்பற்றி தி.மு.க கூட்டணி ஆட்சியை பிடித்தது. இதன் பின்னர் நடந்த கூட்டத்தில் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்பது என முடிவு செய்யப்பட்டு ஆளுநருக்கு கடிதம் பரிந்துரைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆளுநர் அழைப்பு விடுத்ததன் பேரில் இன்று காலை 9 மணியளவில் ஸ்டாலின் முதல்வரகா பதவி ஏற்றார்.

"முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்" என்று அவர் கூறி பதவி ஏற்ற அந்த நிமிடம் ஸ்டாலின் மனைவி திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்கள் கண்ணீர் வடிக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் தன்னையும் மீறி அழத்துவங்கினார். அங்கு கூடியிருந்த தி.மு.க உடன்பிறப்புகள் ஆர்ப்பரிக்க துவங்கினர். கடந்த பத்து ஆண்டுகளாக தி.மு.க எதிர்கட்சி வரிசையில் இருந்தது குறிப்பிடதக்கது.

Similar News