தமிழக தி.மு.க அரசாங்கத்தை வெளுத்து வாங்கும் தி.மு.க லோக் சபா எம்.பி! யார்? ஏன்?

Update: 2021-05-16 14:25 GMT

தர்மபுரி மக்களவை தொகுதியின் எம்.பி செந்தில் குமார். இவர் பாரம்பரிய தி.மு.க குடும்பத்தை சேர்ந்தவர். 

அவர் இன்று தனது ட்விட்டர் பதிவுகளின் தமிழக தி.மு.க அரசை கடுமையாக சாடியுள்ளார். விஞ்ஞானமற்ற, நிரூபிக்கப்படாத சித்த வைத்தியத்தின் மூலம் கொரோனா சிகிச்சை அளிப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளார்.


தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு சரி செய்ய வேண்டும் என கூறியுள்ளார் தி.மு.க. எம்.பி.

சொந்த கட்சி, சொந்த அரசாங்கம், சொந்த முதல்வரிடம் நேரடியாக சொல்ல முடியாமல் இப்படி ட்விட்டரில் பதிவு செய்து நியாயம் கேட்கிறாரே, இவரை யாரும் இவங்க கட்சியிலேயே மதிப்பது இல்லை போல என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

Similar News