கடலூர் எம்.எல்.ஏ-வுக்கு கொரோனோ - அதிர்ச்சியில் தி.மு.க தலைமை!

Update: 2021-05-25 14:00 GMT

தி.மு.க எம்.எல்.ஏ ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதியானதை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனோ இரண்டாம் அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முன்களப்பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் சட்டப்பேரவை உறுப்பினரான ஐயப்பனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.


அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில், "தனது உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Similar News