தடுப்பூசி குறித்து ஸ்டாலின் செய்த பொய் பிரச்சாரமே காரணம் : ஆதாரத்தை போட்டு காட்டிய எடப்பாடி பழனிசாமி..!

Update: 2021-05-28 14:21 GMT

தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் தான் இருக்கிறது, இதற்கு  திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் எதிர் கட்சியாக இருந்த போது  கொரோனா குறித்து மேற்கொண்ட பொய்யான பிரச்சாரம் மற்றும் தடுப்புஊசி  குறித்த தவறான பேச்சுகளே காரணம் என்று திரு. எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.


இன்று சேலத்தில் திரு. எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியபின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் " சேலம் மாவட்டத்தில் கொரோனா வார்டில் இருக்கும் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. ஆகையால் கூடுதல் படுக்கை வசதியை முதல்வர் செய்து தர வேண்டும். அது மட்டுமின்றி திரு. ஸ்டாலின் ஸ்டீல் ஆலையில் ஆக்ஸிஜன் வசதி கொண்ட 500 படுக்கைகள் செய்து தரப்படும் என்று தெரிவித்தார். ஆனால் இன்று வரை அதை செய்து கொடுக்கவில்லை என்றார். அதே போல் தமிழக அரசு மருத்துவமனையில் இருக்கும் படுக்கை வசதிகளுக்கு பொய்கணக்கு காட்டுவதோடு, மக்களின் இறப்பு எண்ணிக்கையும் மறைக்கிறது" என்று குற்றச்சாட்டு வைத்தார்.

இறுதியாக அவர், "தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி அதிகமாக வீணாவதற்கும், கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கும் திரு. ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது தடுப்பூசி குறித்து அவர் செய்த  பொய்யான பிரச்சாரத்தை  பத்திரிகையாளர் முன் போட்டு காட்டினார். அன்று எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது தடுப்பூசி குறித்த சந்தேகத்தை எழுப்பிய அவரே இன்று அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள் என்று கூறுவது அவர் கொரோனா காலத்திலும் செய்யும்  அரசியலை காட்டுகிறது"  என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். 

Tags:    

Similar News