சேவாதினத்தை முன்னிட்டு தமிழக பா.ஜ.க நலத்திட்ட உதவிகள்..!

Update: 2021-06-04 15:21 GMT

பிரதமர் மோடியின் ஏழு ஆண்டு காலம் ஆட்சி  நிறைவடைந்ததை அடுத்து பா.ஜ.க-வினர் அதை சேவா தினமாக கொண்டாடுகின்றனர். இந்த தினத்தில் அந்த கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை   வழங்கி வருகின்றனர்.

இந்த தினத்தில் பா.ஜ.க கட்சியினர் செய்யும் நலத்திட்ட உதவிகளை தமிழக பா.ஜ.க தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர். அதில் தெரிவிக்கும் போது "சேவா தினத்தை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டம், வேளச்சேரி மண்டலில், தண்டீஸ்வரம் சாலையில் மோடி கிட் எனும் மளிகை பொருட்கள்‌ அடங்கிய பையை  ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாநில தலைவர் டாக்டர் எல்.முருகன் அவர்கள்." என்று அதில் குறிப்பிட்டிருந்தது. 


அதே போல் "திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நெல்லை சிந்துபூந்துறை சுந்தரேஸ்வரர் கோவில் & தாழையூத்தில் நலத்திட்ட உதவியாக தொழிலாளர் மற்றும் எளியோருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கினார்." என்று தமிழ்நாடு பா.ஜ.க தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 


தொடர்ந்து பல இடங்களில் பா.ஜ.க-வினர் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News