நீட் தேர்வு: தி.மு.க-வினர் மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர் - தாக்கும் எல்.முருகன்!
நீட் தேர்வை ரத்து இயலாது என்பதை உணர்ந்த தி.மு.க'வினர் மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர் என தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நீட் விவகாரம் தொடர்பாக தி.மு.க'வின் செயல்பாடுகளை குறித்து அறிகை விடுத்துள்ள அவர் கூறியதாவது, "மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி ஆட்சியில் இருந்த 2010ம் ஆண்டு தான் அதுவும் தி.மு.க'வைச் சேர்ந்த காந்திசெல்வன் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சராக இருந்தபோது தான், நீட் தேர்வு குறித்த அறிவிப்பு மத்திய அரசின் கெஜட்டில் முதன்முதலில் வெளியானது காங்கிரஸ் தி.மு.க அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக தனியார் மருத்துவமனைகள் சார்பில் உச்சநீதிமன்றத்தின் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு ஜூவை 18ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியது இந்த தீர்ப்பை எதிர்த்து 2013 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி மேல்முறையீடு செய்தது இதே தி.மு.க காங்கிரஸ் கூட்டணி தான் நிமுக-காங்கிரஸ் கூட்டணியின் இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வை நடத்த வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.
2017-ஆம் ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தான் ஆளும் கட்சியாக இருந்தபோது நீட் தேர்வை கொண்டு வந்த தி.மு.க'வும், காங்கிரஸும் எதிர்க்கட்சியாக அதை நடுமையாக எதிர்த்தன தி.மு.க தலைவர் ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதிகளை அளித்தார். தி.மு.க'வின் தேர்தல் அறிக்கையிலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் எட்டு மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என அறிவித்திருந்தனர். இத்நிலையில் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து இயலாது என்பதை உணர்ந்த தி.மு.க'வினர் மக்களை ஏமாற்றும் மாயாஜாலங்களில் ஈடுபட தொடங்கியுள்ளனர். சமீபத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன், தலைமையில் உயர்நிலை குழுவை ஸ்டாலின் அமைத்துள்ளார். தீட் தேர்வு சமுதாயத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்ந்து தி.மு.க அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியது. இந்த ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ள பணியாகும்.
2010-ஆம் ஆண்டு நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே அது தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டன அதன் பின்னர் சுமார் 6 ஆண்டுகள் உச்சநீதிமன்றமும் பல்வேறு ஆய்வுகளை நடத்திய பிறகுதான் நீட் தேர்வு அவசியம் என தீர்ப்பு வழங்கியது. அதன் பின் முந்தைய அ.தி.மு.க அரகம் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 75 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.