புரசையில் திருநங்கைகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய எல்.முருகன்!

Update: 2021-06-14 14:14 GMT

கொரோனா காலத்தில் தமிழநாடு பா.ஜ.க சார்பாக தொடர்ந்து மக்களுக்கு நிவாரண பொருட்கள், மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழ்நாடு பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன் புரசைவாக்கம் பகுதியில் உள்ள திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவி பொருட்களை வழங்கினார்.


இது குறித்து தமிழ்நாடு பா.ஜ.க தனது ட்விட்டர் பக்கத்தில் "மத்திய சென்னை மேற்கு மாவட்டத்தில், புரசைவாக்கம் பகுதியில் திருநங்கையர் மற்றும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்த மாநிலத் தலைவர் டாக்டர் திரு. எல். முருகன் அவர்கள்." என்று குறிப்பிட்டிருந்தது. இந்த நிகழ்வின் போது பா.ஜ.க தொண்டர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News